போட்டியாளர்களின் திடீர் செயல்.. கதறி அழும் ஜூலி.. பிக் பாஸ் வீட்டிற்குள் திடீர் குழப்பம்
சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 'உம் சொல்றியா அல்லது ஊகும் சொல்றியா' எனும் புது டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது.
Recommended Video
போட்டியாளர்களின் நடவடிக்கையால் ஜூலி கதறி அழும் ப்ரோமோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அல்டிமேட் அணியின் சூப்பர் பிளான்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியைப் பார்த்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன்று இந்த அல்டிமேட் நிகழ்ச்சிகளும் அதிக அளவில் ரசிகர்களை கவர்வதற்காக பல புதிய செயல்களை அறிமுகப் படுத்தி இருக்கின்றனர். அந்த வகையில் இதுவரைக்கும் 5 சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான போட்டியாளர்களை களம் இறங்குவோம் என்று பிக் பாஸ் அல்டிமேட் அணி பிளான் செய்துள்ளது.

சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றம்
இதுவரைக்கும் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்களில் தங்களுடைய பெயரை இழந்த போட்டியாளர்கள் மீண்டும் அதனை சரிசெய்து ரசிகர்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்று விட வேண்டும் என்று இதில் 14 போட்டியாளர்கள் அறிமுகமாகி இருந்தாலும், முதல் வாரத்திலேயே சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறி இருக்கிறார்கள். அனைவரும் ஆரம்பமான முதல் நாளில் இருந்து அதிகளவில் சண்டை போட்டு வருவது இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று கூறி வருகின்றனர். ஆனால் இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஜாலியான பல நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

புதுவிதமான டாஸ்க்
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எட்டாவது நாளில் அடியெடுத்து வைக்கும் நேரத்தல் போட்டியாளர்களுக்கு இன்று புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் 'உம் சொல்றியா அல்லது ஊகும் சொல்றியா' என்னும் தலைப்பில் போட்டியாளர்களுக்கு பிடித்த சக போட்டியாளர்களின் கேரக்டர் மற்றும் அவர்களின் பிடிக்காத கேரக்டரை அனைவரும் கூறி வருகின்றனர். இங்கே சண்டை சச்சரவுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் நேரத்தில் தங்களுக்கு பிடிக்காத கேரக்டரை சொல்கிறேன் என்று சக போட்டியாளர்களின் மனதினை பலரும் காயப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜூலியின் திடீர் அழுகை
ஏற்கனவே முதல்வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியதை பார்த்ததும் அனிதா சம்பத் இன்று காலை போர்டில் நீதி வென்றது என்று எழுதி இருக்கிறார். இது தவறு என்று பாலாஜி முருகதாஸ் எடுத்துக் கூறியும், அனிதா என் மனதில் இருப்பதை நான் அப்படி தான் கூறுவேன் என்று விடாப்பிடியாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் தற்போதைய ப்ரோமோவில் ஜூலி கதறி அழுகிறார். அதை பார்க்கும் போது ரசிகர்கள் ஏற்கனவே எவ்வளவு கெட்ட பெயர் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் இவர் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், யாரோ இவருடைய மனதை அதிகமாக காயப்படுத்தி இருக்கின்றனர். அதனால் தான் ஜூலி இவ்வளவு அழுது கொண்டிருக்கிறார் என்று கூறி வருகின்றனர். ஆனால் இன்னும் ஒரு சிலர் இதுவும் ஒருவகை ரசிகர்களை கவரும் வகையாகத்தான் இருக்குமோ??என்று சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications