Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் விஷ்ணுவின் வாழ்க்கையில் அடுத்தடுத்த சோகங்கள்.. போகும் இடமெல்லாம் இப்படியா ஆக வேண்டும்..!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருத்தருக்கு கெட்ட நேரம் வந்தால் இப்படியா வர வேண்டும் என்று ரசிகர்கள் விஷ்ணுவை நினைத்து குழம்பி வருகிறார்கள்.

சின்னத்திரையின் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கும் விஷ்ணு நடித்துக் கொண்டிருக்கும் சீரியல்கள் ஒரே நேரத்தில் முடிக்கப்படுவதால் அவருடைய ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் பண்ணுகிறார்களாம்.

நடிகர் விஷ்ணு தான் நடிக்கும் சீரியல்கள் முடிவடைவதை பற்றி எந்த ஒரு வருத்தத்தையும் தெரிவிக்கா விட்டாலும் அவருடைய ரசிகர்கள் தான் விஷ்ணு சீக்கிரமாக வேற சீரியலில் வரவேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்து வருகிறார்கள்.

சின்னத்திரை சாக்லேட் பாய்

சின்னத்திரை சாக்லேட் பாய்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலின் மூலமாக சீரியலில் அறிமுகமான விஷ்ணு அந்த சீரியலுக்கு பிறகு சில காலங்கள் எந்த சீரியலிலும் நடித்து வராமல் இருந்து வந்தார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு மீண்டும் சீரியலில் சாக்லேட் பாயாக அறிமுகம் ஆகி இருக்கிறார். இவருக்கு ரசிகைகள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. நடிகர் விமல் மற்றும் அஞ்சலியின் நடித்த மாப்ள சிங்கம் திரைப்படத்திலோ தன்னை துணை கதா நாயகனாக நடித்திருந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்தியா சீரியல் இவருடைய நடிப்பு மற்றும் இவருக்கும் ஆயிஷாவிற்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் சூப்பர் என்று பலரும் சர்டிபிகேட் கொடுத்து கொண்டிருக்கின்றனர்.

கிசுகிசு வதந்தி

கிசுகிசு வதந்தி

சத்யா சீரியலில் நடிக்கும் போது ஆயிஷாவிற்கும் இவருக்கும் காதல் என்று பலரும் வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் அதைப்பற்றி இவர்கள் இருவரும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்போது கலர்ஸ் தமிழில் புது சீரியலில் நடித்து வந்தார். இது சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் இவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ரட்சிதா மகாலட்சுமி நடித்து வருகிறார். இந்த சீரியல் பிற மொழி தழுவல் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனாலும் இதுவும் அழகாக தான் இருக்கிறது என்று இந்த சீரியலுக்கு பலர் ரசிகர்களாக மாறி இருக்கின்றனர்.

கோபத்தை வெளிக்காட்டிய ரட்சிதா

கோபத்தை வெளிக்காட்டிய ரட்சிதா

மிகவும் எதிர்பார்ப்போடு ஒளிபரப்பப்பட்ட இது சொல்ல மறந்த கதை சீரியல் தற்போது ஒளிபரப்பான ஒரு சில மாதங்களில் முடிக்கப்பட்டது. காரணம் என்னவென்று இதுவரைக்கும் சீரியல் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் கூறவில்லை. சீரியல் முடிக்கப்பட்டதால் இதில் கதாநாயகியாக நடிக்கும் ரட்சிதா மகாலட்சுமி தன்னுடைய கோபத்தை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக தெரிவித்திருந்தார். அவர் கலர்ஸ் தமிழ் சேனலை வெறுப்போடு விமர்சிருந்தார். ஆனால் இந்த சீரியல் முடிப்பதை பற்றி விஷ்ணு எந்த ஒரு வருத்தத்தையும் வெளி காட்ட வில்லை. ஆனால் அவருடைய தீவிரமான ரசிகைகள் சீரியல் முடிக்கப்படுவதை குறித்து வருத்தத்தை தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

வருத்தத்தில் ரசிகர்கள்

வருத்தத்தில் ரசிகர்கள்

அதே நேரத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியலும் தற்போது கடைசி கட்டத்தை நெருங்கி விட்டது. இதனால் சீரியல் ரசிகர்கள் அதிகமாக அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். சத்யா சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பி வந்தாலும் இது ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து தான் இது இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் திடீரென்று இந்த சீரியலும் முடிவடைவதை பார்க்கும் போது ஒரே நேரத்தில் விஷ்ணு நடிக்கும் இரண்டு சீரியல்கள் முடிவடைவதால் அவரை விடவும் அவருடைய ரசிகர்கள் வருத்தத்தில், இப்படியா விஷ்ணுவுக்கு நடக்க வேண்டும் என்றெல்லாம் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+