உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி.. டாஸ்க் வைத்து வேட்டு வைக்கும் பிக் பாஸ்
சென்னை: இந்த மாதிரி ஐடியா எல்லாம் பிக் பாஸுக்கு எங்கதான் இருந்து வருகிறதோ என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
கோர்த்து விடுகிறது என்றால் இதுதானா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
எப்படியாவது அடிச்சுக்க வைக்க வேண்டும் என்பது பிக் பாஸின் ஆசை என்று ரசிகர்களுக்கு தெளிவாக தெரிகிறது என்று கமெண்டகள் குவிந்து வருகிறது.

பிக் பாஸின் புது ஐடியா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் புதுவிதமான டாஸ்க்குகள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களையும் குழம்ப வைத்து விடுகிறது. இந்த சீசனில் பொம்மை டாஸ்க்கு வைத்து ஏற்கனவே பிரச்சனைகளை பஞ்சமில்லாமல் தொடங்கிய நிலையில் இப்போது கண்ணாடி டாஸ்க் வைத்து போட்டியாளர்களை பாடாய் படுத்தி இருக்கிறார்கள். சும்மாவே இருந்தால் எப்படி போட்டியாளர்கள் அடித்து கொண்டால் தானே ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் என்று பிக்பாஸ் முடிவு கட்டி விட்டார் போல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பிக் பாஸ் புது டாஸ்க்
உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி என்னும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் இரண்டு அணியாக பிரிந்து ஏ.பி என்று விளையாட வேண்டுமென்று பிக் பாஸ் புது டாஸ்க் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த வீட்டிற்குள் யாருக்கெல்லாம் பிரச்சனைகள் அதிகமாக முட்டிக்கொண்டு இருக்கிறதோ அவர்களை கோர்த்து விட்டு புதுவித பிரச்சனையை உருவாக்க முடிவு செய்து இருக்கிறது. அதுவும் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் வெளிப்படையாக தெரிந்து இருக்கும். அண்ணாச்சி-இசைவாணி, ராஜு-பாவனி, சிபி-அக்ஷரா இவர்களின் காம்பினேஷன் வேற லெவலில் இன்று இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அக்ஷராவுக்கு ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்
சும்மாவே அக்ஷராவிற்கு அழுகிறதுக்கு சொல்லவே வேண்டாம். இந்த நிலையில் இந்த டாஸ்க்கில் சிபியின் செய்கையை பார்த்து அக்ஷரா அழுது கொண்டிருப்பதைப் பார்த்ததும் ரசிகர்கள் இந்தா....தொடங்கிவிட்டார்களா??இன்றைய பர்பாமன்ஸை என்று கலாய்த்து வருகின்றனர். டாக்ஸ்கில் சிபியின் செய்கையை நினைத்து அழுது கொண்டு இருக்கிறாரா??அல்லது பிக் பாஸ் இப்படி கோர்த்து விட்டு விட்டது என்று என்று அழுது கொண்டே இருக்கிறாரா??என தெரியாமல் அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

ரசிகர்களின் கருத்து
இதுவரைக்கும் எத்தனையோ முறை போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் இந்த இடத்தில் எப்படியும் பிரச்சனைகள் பூதாகரமாக வெடிக்கும் என்று ரசிகர்கள் இப்போது ஆர்வமாக காத்திருக்க தொடங்கிவிட்டார்கள். அதுவும் ராஜு செய்யும் சேட்டைகள் வேற லெவலில் இருக்கிறது என்று அவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர். ப்ரமோவில் எப்படி விறுவிறுப்பாக இருக்கிறதோ அதே போல இன்றைய எபிசோடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications