அதுக்குள்ள குழந்தை பற்றியே எல்லோரும் கேட்கிறார்கள்... கண்கலங்க வைத்த கன்னிகா
சென்னை: திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களுக்குள் பார்ப்பவர்கள் பலர் கேட்கும் கேள்வியால் மனத்தொடிந்து போயிருக்கிறார் கன்னிகா ரவி.
பலர் இப்படித்தான் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்று தன்னுடைய வருத்தத்தை வேதனையோடு தெரிவித்துள்ளார்.

காதல் திருமணம்
திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் கன்னிகா ரவி சமீபத்தில்தான் பாடலாசிரியர் சினேகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் எட்டு வருட காதல் திருமணத்தில் முடிந்தது. இருந்தாலும் திருமணத்திற்கு பிறகும் இவர்கள் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்ப வரைக்கும் இருவரும் வெவ்வேறு துறைகளில் இருந்து கொண்டிருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும் இருந்து வருகிறார்கள். இவர்களுடைய காதல் பார்த்து பலர் பொறாமை பட்டு இவர்கள் மனம் நோகும்படி கேள்விகளை கேட்டு வருகிறார்களாம்.

மனம் நோக வைக்கும் கேள்வி
பொதுவாக திருமணம் முடிந்தாலே பெண்கள் மற்றும் ஆண்கள் யாரும் பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் கேட்கும் கேள்வி வீட்டில் ஏதாவது விசேஷம் உண்டா??என்று தான். அந்த மாதிரி தான் தற்போது கூட இவரிடம் அதிகமானோர் வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் கேட்டு வருகிறார்கள். இது இவருக்கு எரிச்சலடைய வைக்கும் கேள்வியாக இருந்துவருகிறது என்று கூறியிருக்கிறார். தன்னுடைய திறமைகளை அதிகமாக சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருக்கும் இவர் இருபத்தி ஆறு வயது பெண்ணாக இருந்தாலும் இவரை விட வயதில் அதிகமாக காதலித்து திருமணம் செய்துள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்
தன்னுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று தான் இவர்கள் காதலை கூட மறைமுகமாக வைத்துக்கொண்டு செயல்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அந்த ஒரு மாற்றம் ஏற்படாமல் தள்ளி போய்க்கொண்டே இருந்ததால்தான் சரி என்று திருமணம் செய்திருக்கின்றனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் கன்னிகா திரைப்படங்களில் நடிப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சின்னத்திரையில் இவர் கடைசியாக நடித்த கல்யாண வீடு சீரியல் மூலமாக இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்திருந்தார். தன்னுடைய திறமையாலும் அழகாலும் அனைவரின் மனதையும் வசீகரித்து விடுகிறார்.
Recommended Video

கண்கலங்க வைத்த கருத்து
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் கண்ணியமான உடை அணிந்து குடும்ப பாங்காக இருப்பதால் பலருடைய பேவரைட் நடிகையாக இருந்து வருகிறார். இவருடைய திடீர் காதல் திருமணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தாலும் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் இவருடைய இந்த கண்கலங்க வைக்கும் பேச்சு ரசிகர்களின் மனதையும் பாதித்து இருக்கிறது. அதனால் பலர் இவருக்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications