நடிகை குஷ்பூவுக்கு வந்த சோதனை.. இப்படியும் ஏமாத்துறாங்க.. இது பலருக்கு பாடம்! உருக்கமான பதிவு
சென்னை: நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ (Khushbu Sundar) தனது பெயரை பயன்படுத்தி சிலர் போலி மெயில் அனுப்பி வருவதாக கூறி சமூக வலைதளத்தில் முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

குஷ்பூ வெளியிட்ட பதிவு
தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் குஷ்பூ வெளியிட்ட பதிவில், "என் பெயரில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் முக்கிய பதவிகளில் இருப்பவர்களுக்கும் சந்திப்பு கேட்டு சில மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதை எல்லோருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
'[email protected]' என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து வரும் எந்த மெயிலும் என்னுடன் தொடர்புடையது அல்ல. அது முற்றிலும் போலியானது. இது ஏமாற்று முயற்சியாக இருக்கலாம்.
எனக்கு யாரையாவது சந்திக்க வேண்டியிருந்தால் நான் எப்போதும் செய்வது போல நேரடியாகவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரம் கேட்பேன். எனவே இந்த மாதிரி வரும் மின்னஞ்சல்களுக்கு தயவுசெய்து பதில் அளிக்க வேண்டாம்.
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்த நபரை விரைவில் பிடிப்போம். இந்த விஷயத்தை எனக்கு தெரிவித்த உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களுக்கு எச்சரிக்கை
இந்த பதிவின் மூலம் குஷ்பூ தனது பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளை பற்றி பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவருடைய பதிவு வெளியானதும் பலரும் அதனை பகிர்ந்து மற்றவர்களையும் எச்சரித்து வருகின்றனர்.
சினிமா முதல் அரசியல் வரை
குஷ்பூ தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கியவர். 1990-களில் பல ஹிட் படங்களில் நடித்த அவர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.
தொலைக்காட்சி மற்றும் அரசியல்
சினிமாவுக்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராகவும், தொகுப்பாளராகவும் குஷ்பூ கலந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரது அரசியல் கருத்துகள் மற்றும் சமூக விஷயங்களில் அவர் வெளிப்படையாக பேசுவது காரணமாகவும் அடிக்கடி செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கும்.
தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவ்
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பூ, சமூக பிரச்சனைகள் முதல் சினிமா வரை பல விஷயங்களில் தனது கருத்துகளை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில், தனது பெயரை பயன்படுத்தி நடக்கும் போலி மின்னஞ்சல் மோசடி குறித்து அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தற்போது இணையத்தில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications