Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணம் ஆன இரண்டே மாதத்தில் கணவரின் செயலால் நொந்து போன மகாலட்சுமி.. இது தவறான முடிவு!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் திருமணம் முடிந்த மகாலட்சுமி தன்னுடைய கணவர் சமூக வலைத்தளத்தில் செய்து செயலை நினைத்து நொந்து போய் கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இரண்டு மாதங்களுக்குள் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இடையே இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

ரசிகர்கள் வியந்து போன திருமணம்

ரசிகர்கள் வியந்து போன திருமணம்

சின்னத்திரை பிரபலமான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்றாலும் சமூக வலைத்தளத்தில் இவர்களுடைய திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எந்த பக்கம் திருப்பினாலும் இவர்களுடைய புகைப்படம் தான் வந்து கொண்டிருந்தது .90ஸ் கிட்ஸ்களின் பலருடைய மோட்டிவேஷன் ஆகவும் ஆறுதலாகவும் ரவீந்திரருடைய திருமணம் இருந்து வந்ததாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

மோட்டிவேஷன் ஆன திருமணம்

மோட்டிவேஷன் ஆன திருமணம்

பலர் வயதாகி விட்டதே நமக்கு திருமணமாகவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் ரவீந்தர்க்கு மகாலட்சுமி கிடைத்தது போல தங்களுக்கும் ஒருநாள் திருமணம் முடியும் என்று இவர்களுடைய திருமண புகைப்படங்கள் மீம்ஸ்களில் கருத்து தெரிவித்து வந்தனர். மகாலட்சுமிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் இவருடைய திடீர் திருமணம் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் மட்டும் குறைந்தபாடில்லை. சமூக வலைத்தளத்தில் இவர்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பல சேனல்கள் இவர்களை வலம் வந்தது.

ரவீந்தர் வெளியிட்ட பதிவு

ரவீந்தர் வெளியிட்ட பதிவு

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவருமே தாங்கள் அடிக்கடி திருமணத்திற்கு பிறகு செல்லும் இடங்களில் எல்லாம் புகைப்படங்களை எடுத்து தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை மேலும் வெறுப்பேற்றி வந்தனர் ரசிகர்கள். பலர் இவர்களுடைய திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று கூறி வந்தாலும், ஒரு சிலர் வயிறு எரிச்சலில் இவர்களை பற்றி நெகட்டிவ் கருத்துக்களையும் வெளியிட்டு வந்தனர் .தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் ரவீந்திர் வெளியிட்ட பதிவு இருந்து வருகிறது.

நொந்து கொண்ட மகாலட்சுமி

நொந்து கொண்ட மகாலட்சுமி

மகாலட்சுமி மற்றும் ரவீந்திர் திருமண முடிந்து இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது .அதற்குள் தனது மனைவியிடம் முட்டையை அவிழ்த்து கேட்டிருக்கிறார். அதை மகாலட்சுமி கருக வைத்து விட்டாராம். அதை அப்படியே போட்டோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நான் என் வாழ்நாள் முழுவதும் பார்த்ததே இல்லை .வேக வைத்த முட்டை இந்த மாதிரி கருகி போகும் என்று, வேறு வழியில்லாமல் என்னை குறைத்து விடும் போல. புதிய வாழ்க்கை, என் மனைவி, அற்புதமான சமையல்காரி என்று ரவீந்தர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து பீல் செய்த மகாலட்சுமி வணக்கம் கணவர் இது மிகவும் தவறான செயல் என்று கமெண்ட் வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இரண்டு மாதங்களுக்குள் முட்டை பிரச்சனை வந்து விட்டதா? என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+