இதற்கெல்லாம் விவாகரத்தா..!! புலம்பிய ரவீந்தருக்கு அறிவுரை கொடுக்கும் ரசிகர்கள்
சென்னை: தயாரிப்பாளர் ரவீந்தர் திருமணத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராம் லைவில் தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் அதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
காதல் திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் தன்னுடைய மனைவியை பற்றி சமூக வலைதளத்தில் பேசியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறதாம்.
தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவியான சின்னத்திரை நடிகை மகாலட்சுமி நடிக்கும் சீரியலை நான்கு நாட்கள் தொடர்ந்து பார்த்தால் டைவர்ஸ் பண்ணி விடுவேன் என்பது போல என்று கூறி இருப்பதாராம் அது தான் இப்போது நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.

ட்ரெண்டிங்கில் ரவீந்தர்
தயாரிப்பாளர் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ கொடுத்துக் கொண்டிருந்த ரவீந்தர் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் நம்பர் 1 ஆக இருந்து வருகிறார். இவர் இதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களை தயாரித்திருந்தாலும் அப்போதெல்லாம் கிடைக்காத பெயரையும்,புகழையும் தற்போது அவருடைய திருமணம் இவருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது. பட்டி தொட்டி எல்லாம் சமூக வலைத்தளங்களில் இவருடைய முகங்கள் தான் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு தன்னுடைய திருமணத்தால் ரவீந்தர் பிரபலம் அடைந்து விட்டார் என்று சொன்னால் மிகையாகாது.

நெகட்டிவ் கருத்துக்கு கவலை இல்லை
தயாரிப்பாளர் ரவீந்தர் சின்னத்திரை நடிகை ஆன மகாலட்சுமியை காதலித்த திருமணம் செய்து கொண்டது 90களில் மனதை அதிகமாக பாதித்துவிட்டது போல. அதனால் தான் அவர்கள் அதிகமாக ரவீந்தரை கலாய்த்து சமூக வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். என்னதான் நெட்டிசன்கள் ரவீந்தரை கலாய்த்து கொண்டிருந்தாலும் பல ரசிகர்கள் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமிக்கு வாழ்த்துக்களை கூறி கொண்டிருக்கிறார்கள். ரவீந்தருக்கு வரும் நெகட்டிவ் கருத்துக்களுக்கு கவலைப்பட வேண்டாம் என்றெல்லாம் ஆறுதல்களை கூறி வருகிறார்கள்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
எளிமையான முறையில் திருப்பதியில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் திருமணம் செய்து கொண்டிருந்தாலும், எல்லோரைப் போல தான் இவர்களும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுடைய திருமண புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். இவர்கள் புகைப்படத்தை வெளியிடும்போது இந்த அளவிற்கு பிரபலமாகும் என்று அவர்களே நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இருவருடைய ஜோடி பொருத்தத்தை பார்த்ததும் நெட்டிசன்களுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி ஆகிவிட்டது போல. அதனால் தங்களால் எந்த அளவிற்கு கலாய்க்க முடியுமோ அந்த அளவிற்கு இந்த ஜோடியை கலாய்த்து வருகிறார்கள்.

நெட்டிசனுக்கு கிடைத்த கண்டன்ட்
எப்போதுமே நெகட்டிவ் கமெண்ட்களுக்கு கவலைப்படாத ரவீந்தர் இப்போதும் இந்த பிரச்சனையை கண்டு கொள்வதே இல்லை. தற்போது இன்ஸ்டாகிராமில் லைவில் வந்து தன்னுடைய ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனக்கு வந்த நெகடிவ் கமெண்ட்களை எல்லாம் தான் கண்டு கொள்வதில்லை என்று கூறிக் கொண்டிருக்கும்போது ஒரு ரசிகர் ரவீந்தரிடம் நீங்கள் உங்கள் மனைவி நடித்த சீரியலை பார்த்து இருக்கிறீர்களா?? என்று கேட்டிருக்கிறார். அதற்கு ரவீந்தர் நான் திருமணத்திற்கு முன்பு பார்த்தது இல்லை. பார்த்திருந்தால் திருமணம் செய்திருக்க மாட்டேன் என்று தனக்கே உரிய நக்கலோடு கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகு நான்கு நாட்கள் இந்த சீரியலை பார்த்து வருவதாக கூறி இருக்கிறார். தொடர்ந்து பார்த்து வந்தால் விவாகரத்து செய்து விடுவேன் போல என்று சொல்ல வந்தவர் பாதியிலே இந்த வார்த்தைகளை மூடிவிட்டு இதை வைத்தும் மீம்ஸ் கண்டண்ட் செய்து விடுவார்கள் என்று நெட்டிசன்களுக்காக பயந்தது போல நடித்து இருந்தார். இதை வைத்து நெட்டிசன்கள் கண்டன்ட் கிரியேட் பண்ணி தற்போது ரவீந்தருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications