இலை கிடைத்தும் குக்கர் முந்தியதே... தோல்வியை ஜீரணிக்க முடியாமல் அதிமுகவினர் கலாட்டா?
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைத்தும் தோல்வி பெற்றுவிடுவோமோ என்ற அச்சத்தின் காரணமாக அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: ஆர்கே நகர் வாக்கு எண்ணிக்கையில் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் அதை ஜீரணிக்க முடியாத அதிமுகவினர் கலாட்டாவில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்கே நகர் இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியில் தொடங்கியது. ஆரம்பிக்கும் முன்பே அதிமுகவினர் அடையாள அட்டை இன்றி மையத்துக்கு சென்றுவிட்டதாக திமுகவினர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
சற்று நிலை சீரடைந்த பின்னர் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் திமுக ஒரு வாக்கை பெற்று அக்கவுன்ட்டை ஓபன் செய்தது.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு பதிவு இயந்திரங்களின் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. அதில் இரண்டாவது சுற்றில் தினகரன் 7276 வாக்குகளும், அதிமுக 2738 வாக்குகளும், திமுக 1182 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

மோதல்
இதன் மூலம் தினகரன் முன்னிலையில் உள்ளார். இதனிடையே அதிமுக முகவர்களுக்கும் தினகரன் அணி முகவர்களுக்கும் இடையே கடும் மோதல் எழுந்தது. இதனால் மேஜைகள், நாற்காலிகள், மைக்குகள் தூக்கி வீசப்பட்டன. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையை அதிகாரிகள் நிறுத்திவிட்டனர். ராணி மேரி கல்லூரியில் பெரும் ரகளை நடைபெறுவதால் துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

தோல்வியை சந்திக்க முடியாமல்...
மற்ற கட்சிகள் யாரும் கலாட்டாவில் ஈடுபடாத நிலையில் அதிமுக மட்டும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இது அதன் தோல்வியை அதுவும் சுயேச்சை வேட்பாளரிடம் பெறும் தோல்வியை ஜீரணிக்க முடியாததே காரணமாக கூறப்படுகிறது.

அதிமுக ரகளை
கடுமையாக போராடி இரட்டை இலையை பெற்றம் ஒரு சுயேச்சை சின்னத்திடம் ஆளும் கட்சி தோற்றுவிடும் அவப்பெயர் ஏற்பட்டுவிடுமே என்ற கவலையில் அதிமுகவினர் இதுபோல் ரகளையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications