கொரோனா வதந்தி: மாணவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து - ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தனியார் தொலைக்காட்சி லோகோவை பயன்படுத்தி கொரனா வைரஸ் தொடர்பாக வதந்தி குற்றத்திற்காக மாணவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சைபர் குற்றத்தின் கீழ் வரவில்லை என்றும் குண்டர் சட்டத்தில் அடைக்க பட்டவர்கள் மாணவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டும் அவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தில் கொரோனா வைரஸ் குறித்து தனியார் தொலைக்காட்சியின் லோகோவை பயன்படுத்தி சுமார் 24 பேருக்கு கொரனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பரப்பியதாக துக்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆரம்ப சுகதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பங்களாப்புதூர் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் கல்லூரி மாணவர் கார்த்திகேயன் மற்றும் ஒருவரை கடந்த மார்ச் மாதம் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 17 வயது மாணவர் கோவையில் உள்ள சீர்திருத்த பள்ளிக்கூடத்திலும், 19 வயது மாணவர் கோபியில் உள்ள மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் 19 வயது மாணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி சக்தி கணேசன் பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரையின் பேரில் 19 வயது மாணவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்துசெய்ய கோரி கார்த்திகேயனும் மற்றொரு மாணவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இது சைபர் குற்றத்தின் கீழ் வரவில்லை என தெரிவித்தும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் மாணவர்கள் என்று கருத்தில் கொண்டும் அவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications