ஆன்லைனில் முளைத்த காதல்.. பாவம், ஒரு மாணவியை என்னவெல்லாம் செய்ய வைத்திருக்கிறது பாருங்கள்!
காணாமல் போன காதலனை தேடி சிறைசாலை வரை சென்றதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்: ஆன்லைன் மூலம் முளைத்த காதல் ஒரு இளம்பெண்ணை என்னவெல்லாம் செய்ய வைத்திருக்கிறது என்ற கதை தான் இப்போது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
இந்த உலகில் இன்னமும் புரியாத புதிராக விளங்கும் பல விஷயங்களில் மிக முக்கியமானது காதல். ஒரு பெண்ணுக்கோ, ஆணுக்கோ காதல் வந்துவிட்டால், அது அவர்களை எந்த எல்லைக்கும் போக வைக்கும். அதனால் தான் இன்னமும் பல சினிமாக்கள் காதலை மையப்படுத்தியே வந்து கொண்டிருக்கின்றன.
சமயங்களில் நிஜ காதல்கதைகள் சினிமாவையும் மிஞ்சி விடும். இப்போதும் அப்படிப்பட்ட ஒரு விநோத காதலை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூலியா என்ற பெண்ணின் காதல் கதைதான் அது.

ஜூலியாவின் காதல்
டிக்டாக் வீடியோவில் ஜூலியா தனது காதல் கதையை விவரித்துள்ளார். அதில் அவர், "நான் அப்போது மேல்நிலை பள்ளியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். ஆன்லைன் மூலம் ஒரு பையன் எனக்கு அறிமுகமானான். முதல் முறை சாட்டிங் செய்த போதிருந்தே அவன் மீது எனக்கு ஈர்ப்பு வந்துவிட்டது.

இனிமையான நாட்கள்
நாங்கள் இருவரும் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்தோம். சுமார் 3 மாதங்களுக்கு மேல் இருவரும் ஆன்லைனில் டேட்டிங் செய்தோம். அவன் மீது நான் காதலில் விழுந்தேன். அந்த நாட்கள் அத்தனை இனிமையாக கழிந்தன.

மாயமான காதலன்
திடீரென ஒரு நாள் அந்த பையனிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை. அவனிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தியாவது வந்துவிடாதா என நான் ஏங்கினேன். அவனை பற்றி அவனது நண்பர்கள் பலரிடம் விசாரித்தேன். அவர்களுக்கும் அவன் எங்கு போனான் என தெரியவில்லை.

சிறையில் காதலன்
இந்த சூழலில் தான் அவன் சிறையில் இருப்பது எனக்கு தெரியவந்தது. எப்படியாவது சிறைக்கு சென்று அவனை பார்த்துவிட வேண்டும் என நினைத்தேன். அதற்காக எனது பள்ளியில் உள்ள மாணவர்களுக்கான சட்டக்குழுவில் இணைந்தேன். தொடர்ந்து அந்த குழுவில் அதிக கவனத்துடன் இயங்கினேன். இதன் மூலம் சிறைசாலைக்கு நேரில் செல்லும் வாய்ப்பு எனக்கு வந்தது.

ஜூலியாவின் சிறைப்பயணம்
ஒரு நாள் சட்டக்குழுவுடன் சேர்ந்து நான் சிறைக்கு சென்றேன். ஆனால் அங்கு நான் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்ந்துவிட்டது", எனக் கூறி ஜூலியா நிறுத்த, "அதன் பிறகு என்ன ஆனது... உங்கள் காதலனை பார்த்தீர்களா...", என துள்ளாத மனமும் துள்ளும் விஜய்யிடம் பிளாஷ்பேக் கேட்பது போல ஜூலியாவின் பாலோயர்கள் அவரிடம் பேராவலுடன் கேட்டனர்.

கடைசியில் என்ன ஆனது?
ஒரு சிறிய இடைவெளிக்கு பின் ஜூலியா, "நான் பெண் என்பதால் என்னை ஆண்கள் இருக்கும் சிறைக்கு அனுமதிக்கவில்லை. மாறாக என்னை பெண்கள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்கு அனுப்பிவிட்டனர். நான் எவ்வளவோ முயன்றும் என்னால் என் காதலனை பார்க்க முடியவில்லை.

ஜூலியாவின் மெசேஜ்
அதன் பிறகு தான் எனக்கு புரிந்தது சிறைக்கு சென்ற ஒருவனை காதலித்தது எத்தனை பெரிய தவறு என்பது. எனவே என்னை போல் யாரும் முட்டாள் தனமாக இது போன்ற காரியங்களை செய்ய வேண்டாம்" என மெசேஜ் சொல்லி ஜூலியா தனது கதையை முடித்து விட்டார். சுபமான முடிவு கிடைக்கும் என ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்த அவரது பாலோயர்கள் இதனால் ஏமாற்றமடைந்தனர்.

விரைவில் திரைப்படம்
ஆனாலும் ஜூலியாவின் இந்தக் காதல் கதை வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட ஆன்லைன் காதலால், இளம்பெண் ஒருவர் காதலனைத் தேடி சிறை வரை சென்று வந்தது இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. வளர் இளம்பெண்கள் உள்ள வீடுகளில் இருப்போர் இன்னமும் ஜாக்கிரைதையாக இருக்க வேண்டும் என்பதற்கு ஜூலியின் இந்த கதை ஒரு பாடம்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications