Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை திவ்யா கணவரோடு ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் பிரபலமான சீரியல் நடிகை தானா? இப்படி எல்லாமா!!??

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான திவ்யா ஸ்ரீதர் தற்போது பரபரப்பான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

தன்னுடைய காதல் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக அவர் அதில் பேசியிருக்கிறார்.

திவ்யாவுக்கும் அவருடைய கணவருக்கும் பிரச்சனைக்கு காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியல் கதாநாயகி என்று கூறியிருக்கிறார்.

பரபரப்பு குற்றச்சாட்டு

பரபரப்பு குற்றச்சாட்டு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் அர்னாவ்வின் மனைவி திவ்யா ஸ்ரீதர் தற்போது தன்னுடைய கணவர் மீதும் அவரோடு நடிக்கும் நடிகர் மீதும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். அதில் திவ்யா சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலமாக தமிழ் சீரியலுக்கு வந்ததாகவும், அப்போது அவரோடு நடித்த அர்னாவ்வை காதலித்து வந்ததாகவும் இவர்கள் இருவரும் ஐந்து வருடம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததாகவும் கூறி இருக்கிறார்.

கண்டிஷன் திருமணம்

கண்டிஷன் திருமணம்

ஒரு சில மாதங்களுக்கு முன்பு அர்னாவ் மற்றும் திவ்யாவுக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும் கூறி இருக்கிறார். திவ்யா இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் முஸ்லிம் மதத்திற்கு மாறினால்தான் நம்முடைய திருமணம் நடக்கும் என்று கூறியதாகவும், அர்னாவ்வின் வார்த்தைக்காக திவ்யாவும் முஸ்லிம் மதத்திற்கு மாறி அருணவை திருமணம் செய்து இருக்கிறாராம். அதன் அதன் பிறகு கோவிலில் வைத்தும் திருமணம் செய்து இருக்கின்றனர்.இரண்டு மதத்தின் அடிப்படையில் இவர்கள் திருமணம் செய்திருந்தாலும் ரெஜிஸ்டர் செய்ததாகவும் கூறி இருக்கிறார்.

அளிக்கப்பட்ட புகைப்படங்கள்

அளிக்கப்பட்ட புகைப்படங்கள்

vதிருமணத்திற்கு பிறகு புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்யா பதிவிட்டதும் அதை டெலிட் செய்ய சொல்லி அர்னாவ் கூறியிருந்தாராம். அதனால் தான் கடந்த மாதம் இவர் போஸ்ட் செய்த இரண்டு நாட்களில் அனைத்து போட்டோக்களும் டெலிட் செய்யப்பட்டிருந்ததாம். அது மட்டும் அல்லாமல் இருவரும் விளம்பர ஷூட்டிங் காக அப்படி போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்துக் கொண்டதாகவும் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.இந்த நிலையில் அதுவெல்லாம் அர்னாவ் சொல்லித்தான் தான் செய்ததாக திவ்யா கூறியிருக்கிறார்.

காரணம் இவர்தானாம்

காரணம் இவர்தானாம்

திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த திவ்யாவின் வாழ்க்கையில் அர்னாவ் செல்லமா சீரியலில் நடிக்க தொடங்கிய பிறகுதான் பிரச்சனை தொடங்கியிருந்ததாம். செல்லமா சீரியலில் ஒரு மாதம் நன்றாக போய்க் கொண்டிருந்ததாம். அதற்குப் பிறகு அந்த சீரியல் கதாநாயகியோடு அர்னாவ்க்கு தொடர்பு ஏற்பட்டிருப்பதாகவும், நெருங்கி பழகி வருவதாகவும் திவ்யாவிடம் பலரும் கூறியிருந்தார்களாம். ஆதலால் அதைப்பற்றி திவ்யா அர்னாவ்விடம் கேட்ட பிறகு தான் இவர்கள் இருவருக்கும் அதிகமாக சண்டை ஏற்பட்டதாம். தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கிறார். இந்த செய்தியை ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக திவ்யா ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் திவ்யாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் செல்லம்மா சீரியல் ஹீரோயினி அன்ஷிதா தான் காரணம் என்று திவ்யா கூறி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+