Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டை விட்டு கிளம்பிய ஜனனி.. வீட்டிற்குள் வரும் புது நபர்.. குணசேகரனுக்கு இனி திண்டாட்டம் தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

தீபாவளி சீர் செய்வதற்காக வந்த ஜனனியின் குடும்பத்தினருக்கு பெரிய அதிர்ச்சி தான் கிடைத்திருக்கிறது.

ஜனனியை காணாமல் அனைவரும் தேடிக் கொண்டிருக்கும்போது வீட்டுக்குள்ளே வரும் நபரால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

வீட்டை விட்டு கிளம்பிய ஜனனி

வீட்டை விட்டு கிளம்பிய ஜனனி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியின் கேரக்டரை பற்றி சக்தி தவறாக பேசுவதால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஜனனி திட்டி விடுகிறார். சக்திக்கு சப்போட்டாக குணசேகரன் அதட்டுவதால்,ஜனனி குணசேகரனை நான் சக்திக்கு மனைவியா? உங்களுக்கு மனைவியா என்று கேட்டு திட்டி விடுகிறார். இதனால் கதிர் ஜனனியை கன்னத்தில் அடித்து விடுகிறார். இதனால் இனி நான் உனக்கு மனைவியும் இல்லை, உன் வீட்டிற்கு மருமகளும் இல்லை என்று வீட்டை விட்டு கிளம்பி சென்று விட்டார். ஜனனி சென்றது தெரியாமல் அவருடைய குடும்பத்தினர் ஜனனிக்கு தீபாவளி சீர் செய்வதற்காக வந்திருந்தனர்.

 குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி

குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி

ஜனனியின் அம்மா மற்றும் குடும்பத்தினரிடம் குணசேகரனும் சக்தியும் ஜனனியை பற்றி தவறாக பேசுகின்றனர். இதனால் ஜனனியின் அம்மாவும் அனைவரையும் திட்டிவிட்டு சென்றிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஜனனி மட்டும் எங்கே சென்றார் என்பது தெரியவில்லை, ஜனனிக்கு ஏதாவது ஆகிவிட்டது என்றால் உங்கள் யாரையும் விடமாட்டேன் என்று சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் ஜனனி வீட்டை விட்டு கிளம்பியதால் வீட்டில் இருக்கும் மற்ற மருமகள்கள் அனைவரும் வாசற்படியில் உட்கார்ந்து ஜனனி எங்கே சென்று இருப்பார் என்று புலம்பி கொண்டிருக்கின்றனர்.

வந்தாள் சூப்பராக இருக்கும்

வந்தாள் சூப்பராக இருக்கும்

ஜனனி வீட்டை விட்டு வெளியேறியதை பற்றி ஜனனியின் அண்ணன், வாசுவுக்கு போன் செய்து பேசுகிறார் .அடுத்ததாக குணசேகரன் வீட்டில் காம்பவுண்ட் கதவு திறக்கப்படுகிறது. இதோடு இன்றைய ப்ரமோ முடிவடைந்து இருக்கிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் அடுத்ததாக வீட்டிற்குள்ளே யார் வரப் போகிறார்கள் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் ஜனனியின் தோழியான வாசு தான் உள்ளே வரவேண்டும், வீட்டிற்குள்ளே வந்து குணசேகரனை மற்றும் சக்தியையும் நல்லா நாக்கப்பிடுங்கிக்குற மாதிரி நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

வீட்டிற்கு வருபவர்

வீட்டிற்கு வருபவர்

இல்லை என்றால் கௌதமோடு சேர்த்து வைத்து தான் சக்தி ஜனனியை பேசி இருப்பதால், கௌதம் வந்து சக்திக்கு நாலு போட்டு அவருடைய அண்ணனுக்கும் இரண்டு செவிலில் விட வேண்டும். அப்படி இருந்தால்தான் இன்றைய எபிசோடு தீ பறக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் ஜனனி தான் மீண்டும் வீட்டிற்குள் வரப் போகிறார் என்று கூறி வருகிறார்கள். ஆனால் இறுதியாக வாசு தான் ஜனனியின் வீட்டிற்குள் வரப்போகிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+