பிக்பாஸ் அல்டிமேட்: தாமரைக்காக வருண் செய்த சூப்பர் செயல்.. வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வருண் தன்னோடு இருந்த சக போட்டியாளரான தாமரைச்செல்விக்கு செய்த செயல் ரசிகர்களின் மத்தியில் நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருண் செய்த செயலை தற்போது அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரைச்செல்வி அனைவரிடமும் கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ஐந்தாவது சீசன் போட்டியாளர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் வருண். இவர் ஒரு பிரபலமான திரை குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தான் தன்னுடைய சுய அடையாளத்தை உலகிற்கு காட்ட வேண்டும் என்பதற்காக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவரே கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவரைப்போல ஒரு போட்டியாளராக அறிமுகமான தாமரைச்செல்வி கிராமத்திலிருந்து வந்து அனைவருடைய மனதிலும் தனி இடத்தை பிடித்து விட்டார்.

வியக்க வைத்த வளர்ச்சி
தாமரை செல்வி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது ஆரம்பத்தில் யாரென்றே தெரியாமல் இருந்த இவர் ஒரு சில நாட்களிலேயே தன்னுடைய வளர்ச்சியை அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு வளர்ச்சி அடைய தொடங்கிவிட்டார். இவரெல்லாம் இங்கே வந்து என்ன விளையாடப் போகிறார் என்று ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு கூட, இவருடைய வேற லெவல் விளையாட்டு அல்லு கொடுத்திருக்கிறது. வெளி உலக அனுபவம் உள்ள போட்டியாளர்களையும் இவர் பின்னுக்குத்தள்ளி பாப்புலராகி விட்டார். ஆரம்பத்தில் விளையாட்டை பற்றி தெரியாமல் இருந்த இவருக்கு போட்டியாளர்கள் தான் விளையாட்டைப் பற்றி தெளிவாக விளக்கம் கொடுத்து வந்தனர்.

தாமரைச்செல்வி கூறிய வார்த்தை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பேர் இருந்தாலும் தாமரைச்செல்வி ஆரம்பம் முதலே வருண் மற்றும் அக்ஷராவிடம் தான் நெருக்கமாக பழகி வந்தார். அதனால்தான் இருவரும் ஒரே நேரத்தில் வெளியேறியதும் இவர் தனக்கு என்று யாரும் இங்கே இல்லை, நான் தனியாக இருக்கிறேன் என்று ஃபீல் பண்ணி வந்தார். அந்த அளவிற்கு இவர்களுடைய பாசம் இருந்தாலும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகும் இவர்களுடைய பாசம் நீடித்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஒரு சமையல் டாஸ்க் நடைபெற்றது. அந்த டாஸ்கில் தாமரையின் அணி ஜெயித்து விட்டது. அவருக்கு அடுப்பு வழங்கப்பட்டது அப்போது மிகவும் சந்தோசமாக என் வீட்டில் அடுப்பு இல்லை என்று தாமரைச்செல்வி கூறியிருந்தது அனைவருக்கும் தெரியும்.

வருணின் வஞ்சனை இல்லாத அன்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு வருண், தாமரை செல்விக்கு கருப்பு கலர் டபுள் டோர் பிரிட்ஜ் வாங்கி கொடுத்துள்ளாராம். அதுமட்டுமல்லாமல் ஓவன் போன்ற வீட்டு உபயோக பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளாராம். இதை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் நாளில் தாமரைச்செல்வி அனைவரிடமும் கூறி பெருமை பட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் வருணுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சில பேர் ஒன்றாக இருக்கும்போது மட்டும் பாசத்தை கொட்டுவார்கள். ஆனால் விலகி சென்று விட்டால் அதற்குப் பிறகு கண்டுக்கவே மாட்டார்கள். ஆனால் வருண் அப்படி இல்லை என்று தற்போது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications