Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் சோகத்தை சொன்னால் உலகம் தாங்காது.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜிபி முத்துவின் உருக்கமான பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: என் நிலைமையை நினைச்சா கவலையா இருக்கு, என் சோகத்தை சொன்னா இந்த உலகமே தாங்காது என்று ஜிபி முத்து பேசிய வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று பலரும் அறிவுரை கூறிய நிலையில் அதற்கெல்லாம் செவி சாய்க்காத ஜி பி முத்து இப்ப மட்டும் எதற்காக இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டார் என்று பலரும் அவர் மீது கோபமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

 ஜி பி முத்துவின் முடிவு

ஜி பி முத்துவின் முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஆறாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட ஜிபி முத்து ரசிகர்கள் அதிகமான ஆதரவு கொடுத்து வந்த நிலையில் திடீரென்று இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார். ஆரம்பம் முதலே இவர் நிகழ்ச்சியில் இருந்தால் சிறப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கு என்டர்டைன்மென்ட் கிடைக்கும் என்று பலரும் கூறி வந்த நிலையில் ஜிபி முத்துவின் வெளியேற்றம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதுவும் இந்த நிகழ்ச்சியில் இவர் இருந்தால் இவர்தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்று அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் ஆணித்தனமாக கூறி வந்த நிலையில் ஜிபி முத்து எடுத்த அதிரடியான முடிவு பலருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாததாக தான் இருந்து வந்தது.

கோபப்பட வைத்த வீடியோ

கோபப்பட வைத்த வீடியோ

இந்த ஆறாவது சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 20000 திற்கும் மேற்பட்டோர் தாங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக விருப்பம் தெரிவித்து வீடியோ வெளியிட்ட நிலையில், இதில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்வதற்கு ஜி பி முத்துவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் முதல் ஆளாக இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதும், திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் தன்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் தன்னுடைய மகன் நினைவு அதிகமாக இருக்கிறது என்று வெளியேறிய ஜிபி முத்து தற்போது வெளியிட்ட உருக்கமான வீடியோ தான் ரசிகர்களை மேலும் கோபப்பட வைத்திருக்கிறது.

பங்கம் செய்த மனைவி

பங்கம் செய்த மனைவி


பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜி பி முத்து அறிமுகமாகாமல் இருந்திருந்தால் அந்த 20000 போட்டியாளர்களில் வேறு எவருக்காவது அந்த இடம் கிடைத்திருக்கும். ஆனால் இவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டு வாரத்தில் வெளியேறி ஒரு இடத்தை வேஸ்ட் ஆக செலவழித்து விட்டார் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் தற்போது என் மனதில் இருக்கும் சோக கதைகளை சொன்னால் இந்த உலகமே தாங்காது அவ்வளவு சோகத்தை நான் மனதிற்குள்ளே வைத்திருக்கிறேன். பலரையும் சிரிக்க வைத்த நான் இப்படி சோகத்தில் இருப்பதற்கு காரணத்தை யாராவது கேளுங்கள் என்று இவர் வெளியிட்ட வீடியோவில் தனது மனைவியிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். ஆனால் அவருடைய மனைவி கடும் கோபத்தில் இவரை திட்டி விடுகிறார்.

தெரித்து ஓடிய ஆனந்த் தம்பி

தெரித்து ஓடிய ஆனந்த் தம்பி

உங்கள நாங்களா பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வர சொன்னோம். நாங்க உள்ள இருங்கன்னு தானே சொன்னோம். ஆனா நீங்க வெளியே வந்துகிட்டு இப்படி எல்லாம் சொல்லலாமா? என்று உங்க சோக கதையை நான் கேட்க மாட்டேன் என்று செல்லமாக கோபிக்கிறார். என் நிலைமையை நினைச்சா கவலையா இருக்கு என்று ஜிபி முத்து பீல் பண்ணி சொல்லும் போது அருகில் இருந்த அவருடைய ஆனந்த் தம்பியும் தலை தெறிக்க ஓடுகிறார். யாருமே இவருடைய கதையை கேட்பதற்கு தயாராக இல்லை என்பதை பார்த்த ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து கலாய்த்து சிரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+