சிபிஎம் நிர்வாகி படுகொலை.. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 13 பேர் விடுதலை.. கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பு
திருவனந்தபுரம்: சிபி(ஐ)எம் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கிலிருந்து 13 ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இந்த தீர்ப்பை கேரள உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கேரளம் எப்போதும் அரசியல் கொந்தளிப்புடன் உள்ள மாநிலமாகும். பல முன்னேற்றமான நடவடிக்கைகளில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாய் விளங்கும் கேரளத்தில் இந்த அரசியல் கொந்தளிப்பு இயல்பானதாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாநில உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபி-ஐ-எம்) கட்சியினருக்கும் பாஜகவின் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கும் இடையேயான மோதல் வழக்கமான ஒன்று. இந்நிலையில் கடந்த 2001ம் ஆண்டு நடந்த மோதலில் சிபி(ஐ)எம்-ன் பிரமுகர் விஷ்ணு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 13 ஆர்எஸ்எஸ் ஊழியர்களையும் குற்றவாளிகளாக உறுதி செய்தது.

வழக்கு
மட்டுமல்லாது அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி கடந்த 2008ல் தீர்ப்பளித்தது. இந்நிலையில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் கேரளா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி கே.வினோத் சந்திரன், நீதிபதி சி.ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இறுதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின்படி குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பு
ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி.விஜய பானு மற்றும் பி.ராமன் பிள்ளை ஆகியோர், தனது தரப்பினர் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லையென்றும், அதேபோல ஆளும் கட்சி தரப்பினர் உயிரிழந்துள்ளதால் அவர்களுக்கு சாதகமாக வழக்கு விசாரிக்கப்பட்டு ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன என்றும் வாதாடினர். பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் படுகொலை செய்யப்பட்ட நபர் தரப்பில் வழங்கப்பட்ட ஆதாரங்கள் கேள்விக்குள்ளாக்கினர்.

விடுதலை
மேலும், நேரில் பார்த்ததாக ஆஜர்படுத்தப்பட்ட சாட்சியங்கள் முன்னுக்கு பின்னாக முரணாக உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் இந்த நீதிமன்றம் விடுவிப்பதாக தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பு வெளியானதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ள நிலையில் அம்மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்!












Click it and Unblock the Notifications