கேரளாவில் வெறும் 9 இடங்கள்தான் வித்தியாசம்.. நூலிலையில் கோட்டைவிடும் காங்.. ஏபிபி- சி வோட்டர் சர்வே
திருவனந்தபுரம்: ஏபிபி- சி வோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் கேரளாவில் இடதுசாரிகள் மீண்டும் வெற்றி பெறும் என்றாலும்கூட காங்கிரஸ் கடும் போட்டியைக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் இன்றுதான் கடைசிக்கட்ட சட்டசபை தேர்தல் முடிந்தது. வரும் மே 2ஆம் தேதி தமிழகம், கேரளா, புதுவை உள்ளிட்ட 5 மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அனைத்து செய்தி நிறுவனங்களும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.

வெற்றிதான் ஆனால்
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கேரளாவில் இடதுசாரிகள் 91 இடங்களில் வென்றிருந்தனர். பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி இப்போது அங்கு நடைபெறுகிறது. இந்நிலையில் நடைபெற்ற முடிந்த தேர்தலில் இடதுசாரிகள் கேரளாவில் 74 இடங்களில் வெல்லும் என ஏபிபி- சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

நெருங்கும் காங்கிரஸ்
அதேநேரம் கடந்த 47 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் இந்த முறை கடும் போட்டி கொடுக்கும் என ஏபிபி- சி வோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி 65 இடங்களில் வெல்லும் என ஏபிபி- சி வோட்டர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாஜக - ஒரு இடம் தான்
முதலில் கேரளாவில் ஆட்சி அமைப்போம் என்ற முழக்கத்துடன் பாஜக களமிறங்கியது. இதற்காக மெட்ரோ மேன் ஸ்ரீதரனை தனது கட்சியில் இணைத்தது. இருப்பினும், கேரளாவில் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து தாங்கள் கேரளாவில் கிங் மேக்கராக இருப்போம் என்று பாஜக. இருப்பினும், பாஜக வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வெல்லும் என ஏபிபி- சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் இடதுசாரிகள்
கேரளாவில் இடதுசாரிகள் மிக எளிதில் வெற்றி பெறுவார்கள் எனத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஏபிபி- சி வோட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கடும் போட்டி கொடுத்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இதேபோல ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பிலும் இடதுசாரிகளே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications