கேரளாவில் விபரீதம்.. வீட்டுக்கு முன் மெஸ்ஸிக்கு கட் அவுட்.. மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
திருவனந்தபுரம்: கால் பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் மீதான அதீத அன்பால், அவருக்கு வீட்டின் முன் கட் அவுட் வைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2022 பிபா உலகக்கோப்பை போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதால், உலக அளவில் இது ஒரு திருவிழாவை போல கொண்டாடப்பட்டு வருகிறது.
எப்போதும் கிரிக்கெட் மீது தீராக்காதல் கொண்ட இந்தியர்கள் கூட, இந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகினறனர்.

உணர்ச்சிமிக்க ரசிகர்கள்
கிரிக்கெட் ரசிகர்களை ஒப்பிடும் போது, கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் கூட, தோற்றுப்போன பல நாடுகளின் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவதை பார்க்க முடியும். இந்தியாவிலும் கேரளா, மேற்குவங்கம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் உணர்ச்சிமிகுந்த கால்பந்தாட்ட ரசிகர்கள் இருப்பார்கள். அப்படி, கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செய்த காரியம்தான் அவரின் உயிரையே எடுத்துள்ளது.

மெஸ்ஸியின் தீவிர ரசிகர்
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள இள்ளிக்கால் பகுதியைச் சேரந்தவர் அமீன். கால்பந்தாட்டத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள அவர், அர்ஜெண்டைனா நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் உயிர் ரசிகர் எனக் கூறப்படுகிறது. தான் போடும் டீஷர்ட்டுகள், பைக் ஸ்டிக்கர்கள் என அனைத்திலும் மெஸ்ஸி படத்தை அமீன் வைத்திருந்தார். அந்த அளவுக்கு தீவிர ரசிகராக அவர் இருந்திருக்கிறார்.

கட் அவுட்
இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு மெஸ்ஸிக்கு பெரிய அளவில் கட் அவுட்டை அமீனும், அவரது நண்பர்களும் தயார் செய்துள்ளனர். இதையடுத்து, இந்த கட் அவுட்டை அமீன் தனது வீட்டுக்கு முன்பு வைக்க முயன்றார். இதற்காக 3 மாடி உயரத்தில் கயிறு கட்டி அவர்கள் கட் அவுட்டை கட்டிக் கொண்டிருந்தனர். அமீன் மாடியில் இருந்து அந்த கட் அவுட்டை கீழே சரியாமல் பிடித்துக் கொண்டிருந்தார்.

மின்சாரம் தாக்கி பலி
அப்போது வேகமாக காற்று அடிக்கவே, மெஸ்ஸி கட் அவுட் லேசாக சரிய தொடங்கியது. இதையடுத்து, அந்த கட் அவுட் அங்கிருந்த மின்சார கம்பியின் மீது சரிந்ததில் அந்தக் கம்பி அறுந்து அமீன் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் மீது விழுந்தது. இதில் அவர்கள் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் மற்ற இருவரும் உயிர் பிழைக்க, சிகிச்சை பலனின்றி அமீன் உயிரிழந்தார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications