காங்கிரஸ் மென்மையான ஹிந்துத்துவா கட்சி.. ஆனால் நாங்க அப்படியில்லை.. சொல்கிறார் சீதாராம் யெச்சூரி
திருவனந்தபுரம்: ‛‛மென்மையான ஹிந்துத்துவாவை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது. பாஜகவை எதிர்க்கும் ஒரேசக்தி நாங்கள் தான்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
கேரளா கொச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
மேலும் காங்கிரஸ் கட்சி பலவீனமாகி உள்ளது. ஹிந்துத்துவாவை காங்கிரஸ் கட்சி ஆதரித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சீதாராம் யெச்சூரி கூறியதாவது:

ஹிந்துத்துவாவுடன் காங்கிரஸ்
மத்தியில் ஆளும் பாஜக கட்சி ஆஸ்எஸ்எஸ்சின் பாசிசம், ஹிந்துத்துவா திட்டத்தை முறையாகவும், வேகமாகவும் முன்னெடுத்து வருகிறது. இதனால் ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்றுவது மிக முக்கியமானது. சித்தாந்த ரீதியாக பாஜகவை காங்கிரஸால் எதிர்க்க முடியவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி மென்மையான ஹிந்துத்துவாவுடன் சுற்றி வருகிறது.

பலவீனமாகி உள்ளது
இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி பலமாக இருந்தது. தற்போது காங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது. பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் காங்கிரஸ் கட்சி தங்களை அச்சுறுத்தும் என நினைக்கவில்லை. ஏனெனில் அந்த கட்சியில் நிலையற்ற தன்மை உள்ளது. அதன் தலைவர்கள் எப்போது வேண்டுமானாலும் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி தங்கள் கட்சியில் இணைவார்கள் என பாஜக நம்புகிறது.

எங்களுடன் இணையுங்கள்
பாஜகவை ஆட்சி கட்டிலில் இருந்து விரட்டி காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் சமரச அணுகுமுறை ஒருபோதும் தீர்வாக இருக்காது. இதனால் பாஜகவை அடக்க மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒரு அணியில் இணைந்து பெரும் சக்தியாக உருவாக வேண்டும். அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒன்றிணைக்க வலுவான இடதுசாரிகள் தேவை. பாஜகவுக்கு எதிரான போரை சுதந்திரமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் மேற்கொண்டு வருகிறது. இதனால் இடதுசாரி அமைப்புகள் எங்களுடன் இணைய வேண்டும்'' என்றார்.

இடதுசாரி ஆபத்து
முன்னதாக பிரதமர் நரேந்திரமோடி தனியார் தொலைக்காட்சியின் நேர்க்காணலின்போது இடதுசாரிகளை விமர்சனம் செய்திருந்தார். அதாவது, ‛‛இடதுசாரிகள் ஆபத்தான சித்தாந்தம் கொண்டவர்கள். அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்'' என கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சீதாராம் யெச்சூரி பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன












Click it and Unblock the Notifications