திருநெல்வேலி
Subscribe to Oneindia Tamil

சங்க காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய நெல்லை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில்தான் தென் தமிழகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டை நகர் அமைந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கும், பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் மிகவும் பெயர் பெற்ற இடம் பாளையங்கோட்டை.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நெல்லை என்றாலே தமிழ்நாட்டு மக்களுக்கெல்லாம் ஏன் பிற மாநில மக்களுக்குக் கூட நினைவுக்கு வருவது நெய் மணக்கும் அல்வா தான். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட பலர் இங்கு கிடைக்கும் சுவைமிக்க அல்வாவை உற்சாகத்துடன் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை. அல்வாவுக்குப் பெயர் போன இந்த நெல்லையில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் பல உள்ளன.
பொதுத் தகவல்கள்:
| பரப்பளவு | 87.64 சதுர கிலோ மீட்டர் |
| மக்கள் தொகை | சுமார் 4 லட்சம் |
| வெப்பநிலை | கோடை காலத்தில் சராசரி அதிகபட்சம் 34.8டிகிரி சென்டிகிரேட்
குளிர்காலத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 21.6டிகிரி சென்டிகிரேட் |
| மொழிகள் | தமிழ், ஆங்கிலம், உருது, தெலுங்கு, மற்றும் செளராஷ்டிரா |
| எஸ்.டி.டி.கோட் எண் | 0462 |












Click it and Unblock the Notifications