3 மாதமாக காரணமின்றி விடுப்பு... 20 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப ஏர் இந்தியா முடிவு
டெல்லி: உரிய விளக்கங்கள் ஏதும் தரப்படாமல் கடந்த மூன்று மாதங்களாக விடுப்பில் உள்ள 20 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஏர் இந்தியா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சுமார் 3500 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களில் சராசரியாக 200 ஊழியர்கள் மாதந்தோறும் வேலை ஏதும் செய்யாமல் ஊதியம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

எனவே, கடந்த மூன்று மாத காலமாக தகுந்த அறிவிப்பின்றி விடுப்பில் உள்ள இருபது ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வதற்கான உத்தரவை ஏர் இந்தியா பிறப்பித்துள்ளதாம். இந்த இருபது ஊழியர்களில் 17 பேர் மும்பையையும், 3 பேர் டெல்லியையும் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, கடந்த ஆறு மாதங்களில் ஒழுங்கு நடவடிக்கையாக சுமார் 47 மும்பை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது ஏர் இந்தியா. இந்நிலையில் தற்போது மேலும் 20 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஏர் இந்தியா முடிவெடித்துள்ளது.
அதேபோல், இனி வரும் காலங்களில் தகுந்த காரணங்கள் இன்றி விடுப்பு எடுப்பவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப் படுவார்கள் என்ற அதிரடி உத்தரவையும் ஊழியர்களுக்கு பிறப்பித்துள்ளது.
பெரும்பாலும் இந்த பிரச்சினையில் மும்பை ஊழியர்களே சிக்குவதற்கு காரணம் அவர்கள் முன்பு கையெழுத்திட்டுக் கொடுத்த அக்ரிமெண்ட் தானாம். அதன்படி, வாரம் 80 மணி நேரம் மட்டுமே ஊழியர்கள் வேலை செய்தால் போதுமானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அந்த அக்ரிமெண்ட் வாரத்திற்கு நூறு மணி நேரம் என மாற்றியமைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாத ஊழியர்கள் பணி புரிய வர மறுக்கின்றனராம். ஆனால், இது தவிர பல மறைமுகக் காரணங்களும் ஏர் இந்தியாவில் உள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்தில் வெளியான தகவலின் படி ஏர் இந்தியாவில் பணி புரியும் 600 விமான பணிப்பெண்கள் அதிக உடல் எடையால் அவதிக்குள்ளாகி இருக்கிறார்களாம். அடுத்த 18 மாதத்திற்குள் அவர்கள் தங்கள் எடையை குறைக்கவில்லையெனில், அவர்கள் பணியிழக்கும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் அதிக உடல் எடையைக் கொண்டிருப்பதாகக் காரணம் காட்டி மூன்று விமானப் பணிப் பெண்கள் பணி நீக்கம் செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications