For Daily Alerts
Just In
விடுதலை கிடையாதோ?
கடமுட என ஒரு கவியிடி
கொடியவர் பொடிபட வெடியாதோ?
திடுதிடு மென ஒரு படையணி
அடிமைகள் படுதுயர் துடையாதோ?
மடமட என ஒரு நொடியினில்
இடுகர விலங்குகள் ஒடியாதோ?
கொடியொடு படையொடு முடியொடு
தமிழின விடுதலை கிடையாதோ?
மறவலி மிகுதமிழ் நெறியினர்
சிறையுக மதில்களை நிறையாரோ?
அறவலி யுடையவர் வெறிகொள
உறுபகை தளர்வொடு முறியாதோ?
முறைகெட நெறிசெயு மரசினர்
பறையொடு சுடலையில் உறையாரோ?
கறையொடு தமிழ்படு துயர்கெட
வருபடை புகழ்மொழி அறியாதோ?
இழிநிலை ஒழியென மறமகள்
வளர்இள மழலையை விளியாளோ?
வழிவழி புகழ்நிலை தழுவென
உயிர்நிகர் கொழுநனை அழையாளோ?
ஒளிமிகு விழியொடு குலமெனு
முணர்வோடு செருவிடை நுழையாளோ?
அழிகிய தமிழிள மொழிமகள்
களியினில் முழுநகை பொழியாளோ?
- காசி ஆனந்தன்
chennai astrology literature poems essay poet eelam tamilnadu kural art gallery florals kaasi anandhan kasi anandan pavalar
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]