அவுட் ஆஃப் கண்ட்ரோலில் AI.. "இந்த" ஒரு விஷயத்தை மட்டும் நாம் செய்யவே கூடாது! ஏஐ காட்பாதர் எச்சரிக்கை
சியாட்டில்: AIக்கு உரிமைகளை வழங்க வேண்டும் என்று சொல்லி ஒரு தரப்பு கோரிக்கைகளை விடுத்து வரும் நிலையில், இதை ஏஐ காட்பாதர் யோஷுவா பெங்கியோ கடுமையாக எச்சரித்துள்ளார். இதை ஏலியன்களுக்கு குடியுரிமை வழங்குவதோடு ஒப்பிட்ட அவர், இதுபோல நடந்தால் எதிர்காலத்தில் ஏஐகளை மனிதர்களால் கட்டுப்படுத்தவே முடியாமல் போய்விடும் என்றும் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே AIஐ சுற்றியே உலகமே செயல்பட்டு வருகிறது. AI வந்த பிறகு உலகமே படுவேகமாக மாறி வருகிறது. இதற்கிடையே ஒரு தரப்பு AI டூல்களுக்கு உரிமைகளைத் தர வேண்டும் என ஆரம்பித்துள்ளனர். அதாவது மனிதர்களைப் போல AI டூல்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை

ஏஐ காட்பாதர்
இருப்பினும், இதைச் செயற்கை நுண்ணறிவு துறையின் 'காட்பாதர்' என அழைக்கப்படும் யோஷுவா பெங்கியோ கடுமையாக எச்சரித்துள்ளார். ஜியோஃப்ரி ஹின்டன் மற்றும் யான் லெகுன் ஆகியோருடன் இந்த பெங்கியோயும் ஏஐ காட்பாதர் என்றே அழைக்கப்படுகிறார். 'தி கார்டியன்' இதழுக்கு இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் விரிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
AI-க்கு உரிமைகள் வழங்குவது என்பது ஏலியன்களுக்கு குடியுரிமை வழங்குவதற்குச் சமமானது என்றார். மேலும், இந்த விவகாரத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் இதை மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். AI-க்கு உரிமைகளைக் கொடுப்பது பேரழிவுக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்றும், மக்கள் இது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் பெங்கியோ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
வேகமாக மாறும் AI
செயற்கை நுண்ணறிவு இப்போது நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது. அதன் மாடல்கள் முன்னெப்போதையும் விட வேகமானதாகவும், உற்பத்தித்திறன் மிக்கதாகவும் மாறி வருகிறது. இதனால் AIகளின் பயன்பாடுகளும் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் மனிதர்களைப் போலவே சிந்திக்கும் ஏஜிஐ மாடல்களும் வரவுள்ளன. இவை ஏஐ மற்றும் மனிதர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்கும்.
பெங்கியோவின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து AIக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து தீவிர விவாதம் எழுந்துள்ளது. AIக்கு சட்டப்பூர்வ உரிமைகள் வழங்கப்பட்டால், அவை மனிதர்களுக்கு அளிக்கப்படும் அதே உரிமைகளுடன் நடத்தப்பட வேண்டும். இது இப்போது பெரிய சிக்கலாகத் தோன்றாவிட்டாலும் எதிர்காலத்தில் மிகப் பெரிய தலைவலியாக நமக்கே மாறும்.
மிக பெரிய ரிஸ்க்
மேலும், இதனால் எதிர்காலத்தில் AIகளை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலையும் கூட ஏற்படலாம். மேலோட்டமாகப் பார்க்கும்போது, AIக்கு சட்டப்பூர்வ உரிமைகளை வழங்குவது விசித்திரமான யோசனையாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால், உண்மையில் இது தொடர்பாகத் தீவிர விவாதம் நடந்தே வருகிறது. ஒரு தரப்பினர் ஏஐக்கு உரிமை வேண்டும் எனப் பேச ஆரம்பித்துள்ளனர்.
இருப்பினும், அப்படி உரிமை வழங்கப்பட்டால்.. எதிர்காலத்தில் மனிதக்குலம் AI மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடக்கூடும் என்று யோஷுவா பெங்கியோ சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அவர், "இன்றைய சில குறிப்பிட்ட AI மாடல்கள் ஏற்கனவே தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள ரெடியாகும் அறிகுறிகளைக் காட்டுகின்றன. அவற்றுக்கு உரிமைகளை நாம் வழங்கினால் எதிர்காலத்தில் அதை ஷட் டவுன் செய்ய அனுமதி இல்லை போகும்" என்றார்.
ஏன் ஆபத்து
இதில் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள ஆரம்பிப்பது என்று அவர் சொல்லியுள்ளது முக்கியம். அதாவது இப்போது நாம் கம்பியூட்டரை யூஸ் செய்கிறோம். அதைப் பயன்படுத்தி முடித்த பிறகு அதை ஆஃப் செய்யும்போது, அது ஆஃப் ஆக மாட்டேன் என அடம்பிடித்தால் என்னவாகும். அதுபோலத் தான் ஏஐ டூல்களை க்ளோஸ் செய்ய முடியலும் போது அது தன்னை தானா காப்பாற்றிக் கொள்ள முயல்கிறதாம். அதாவது மனிதர்களைச் சொல்வதைக் கேட்க மாட்டேன் எனச் சொல்லலாம் என்கிறார். இது மிகப் பெரிய ஆபத்தாகப் போகலாம் என பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கிறார்கள்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications