திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா: பக்தர்கள் இன்றி கொடியேற்றம் - ஆன்லைனில் தரிசனம்
திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. திருவிழாவில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவில் பங்கேற்க இன்று முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆவணித்திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் கொரோனா பரவலைத்தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறப்பு குறித்து தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை, வருவாய் பேரிடர் நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலை தொடரும் என அறிவித்திருந்தது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோவில்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் மாசி திருவிழாவும், ஆவணித்திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா இன்று அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. அதிகாலை 5.45 மணி அளவில் கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் கோவில் கொடி மங்கள வாத்திய இசையுடன் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகளும் நடைபெற்றன. ஆவணித்திருவிழா நிகழ்வுகளை பக்தர்கள் வீட்டிலிருந்தே காண இணையதளம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

12 நாட்கள் திருவிழா
12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 31ஆம் தேதி 5 ஆம் திருநாளான குடவருவாயல் தீபாராதனையும், செப்டம்பர் 02ஆம் தேதி 7ஆம் திருநாளன்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 03ஆம் தேதி 8ஆம் திருநாள் பச்சைசாத்தி கோலத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

பிரம்மா, விஷ்ணு, சிவன்
முருகப் பெருமான் இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாகவும் திகழ்ந்து அருள்பாலிக்கிறார் என்பது அர்த்தமாகும். அதை காட்டும் வகையில் சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி தேரோட்டங்கள் நடைபெறும். சிவப்பு சாத்தி தேரோட்டத்தின் போது அலங்காரம், ஆராதனைகள் சுவாமி அம்சம் எல்லாம் சிவப்பாக இருக்கும். அதுபோல வெள்ளை சாத்தி ஊர்வலத்தின் போது எல்லாம் வெள்ளை மயமாக இருக்கும். வெள்ளை சாத்தியை கண்டு இறைவான தரிசனம் செய்தால் பிரம்மாவின் அருளால் நம் தலை எழுத்தே மாறும் என்ற உண்மையை மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் வெள்ளை சாத்திக்கு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது.

கோவில் வளாகத்தில் உலா வரும் முருகன்
10ஆம் தேதியன்று நடைபெறும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் சாமி உலா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலுக்குள் வராத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அறிக்கை
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். ஆவணித்திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளதால் கொரோனா பரவலைத்தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகம விதிப்படி திருவிழா
ஆவணித்திருவிழா நிகழ்வுகளை பக்தர்கள் வீட்டிலிருந்தே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் ஆவணி திருவிழா, ஆகம விதிப்படி பக்தர்களின்றி பணியாளர்கள் மூலம் நடைபெறும் என்று தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் ஏமாற்றம்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் புனித நீராடும் நாழிக் கிணற்றில் நீராட ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலிலும் நாழிக்கிணறிலும் புனித நீராட அனுமதிக்கப்பட்டது. தற்பொழுது ஆவணித்திருவிழா தொடங்கியுள்ளதால் புனித நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications