சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் ஆன்லைன் பதிவுக்கு எதிர்ப்பு - தீட்சிதர்கள் போராட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஆன்லைன் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் 29 ஆம் தேதியும், 30 ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது.
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழா மற்றும் ஆருத்ரா தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் பதிவு கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் மற்றும் சிவபக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் வாசலில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவபெருமானின் பஞ்சசபைகளில் கனகசபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆனி மாதத்தில் நடைபெறும் திருமஞ்சனமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டு ஆருத்ரா தரிசனம் வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கான கொடியேற்றம் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது. வரும் 31 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடராஜர் கோயிலில் தேரோட்டம் 29 ஆம் தேதியும், 30 ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழா மற்றும் ஆருத்ரா தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் பதிவு கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. நாளை நடைபெறவுள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழாவில் பங்கேற்க http://aruthracarfest.com என்ற இணையதளத்திலும், நாளை மறுநாள் கோயிலுக்குள் நடைபெறவிருக்கும் தரிசனத்தில் பங்கேற்க http://aruthraonline.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் மற்றும் சிவபக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் வாசலில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications