மகரசங்கராந்தி 2019 பிரவேசம்- எந்த நட்சத்திரக்காரர்களுக்கு என்ன பலன்
காலதேவதை மகரசங்கராந்தியின் பிரவேசம் இன்னும் சில தினங்களில் நிகழ உள்ளது. 2019 ஜனவரி தொடங்கி 2020 ஜனவரி வரை என்ன பலன்கள் நடைபெறும் என்பதை தனது லட்சணங்களினால் உணர்த்துகிறார்.
சென்னை: மகரசங்கராந்தி என்னும் கால தேவதை இந்த ஆண்டு இந்த ஆண்டு மார்கழி மாதம் 30ஆம் தேதி திங்கட்கிழமை ஜனவரி 14,2019 வளர்பிறை அஷ்டமி திதி அஸ்வினி நட்சத்திரம் சித்த யோகம், பவகரணம் இரவு 7 மணி 51 நிமிடத்தில் கடக லக்னத்தில் பிரவேசிக்கிறார். மகரசங்கராந்தி தேவதையின் தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள்.
தை மாதத்தில் சூரியனுக்கு பகன் என்று பெயர். தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதுவரை தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தனது பயணத்தை தைமாத பிறப்பன்று வடக்கு திசையை நோக்கி தொடங்குகிறார். இதை உத்திராயண புண்ணியகாலம் என்பர். உத்திராயணம் என்றால் வடக்குப்புறமான வழி என்று பொருள். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. இதில் தை மாதம் முதல்நாளை மகர சங்கராந்தி, தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம்.

ஒவ்வொரு ஆண்டுக்கும் சங்கராந்தி தேவதை என்று ஒன்று உண்டு. இதனை 'மகர சங்கராந்தி தேவதை' என்று அழைப்பார்கள். இவ்விதம் 60 வருடங்களுக்கு தனித்தனிப் பெயருடைய சங்கராந்தி தேவதைகள் உள்ளன. இந்த தேவதைகளின் தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள்.
இந்த ஆண்டு மகரசங்கராந்தி தேவதை எப்படி எதன் மீதேறி வருகிறார் அதற்கான பலன்கள் எப்படி என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
அஸ்வினி நட்சத்திரம் அஷ்டமி திதி
இந்த ஆண்டு மார்கழி மாதம் 30ஆம் தேதி திங்கட்கிழமை ஜனவரி 14,2019 வளர்பிறை அஷ்டமி திதி அஸ்வினி நட்சத்திரம் சித்த யோகம், பவகரணம் இரவு 7 மணி 51 நிமிடத்தில் கடக லக்னத்தில் த்வாந்த என்ற பெயருடன் சந்தன ஸ்நானம் செய்து, வெண்மை நிற ஆடை அணிந்து கஸ்தூரி பூசிக்கொண்டு மாணிக்க ஆபரணம் அணிந்து, புன்னை மலர் மாலைச் சூடி தேங்காய் அன்னம் பொற்கிண்ணத்திலிட்டு சாப்பிட்டு, வீணையை கையில் ஏந்தி, வெண்கொற்றக்குடை பிடித்து, சிம்மவாசனத்தில் அமர்ந்து, புன்னகையோடு உட்கார்ந்த நிலையில் கிழக்கு திசை நோக்கி மகர சங்கராந்தி புருஷன் வருகிறார்.
பலன்கள் எப்படி
• நல்ல மழையுண்டு, செழிப்பு உண்டாகும். பொதுமக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பர். மருத்துவமனைகள் பெருகும்.
• அரசியல் பிரமுகர்களுக்குக் கெடுதி ஏற்படும்.
• தேங்காய் விலை கூடும், தீ விபத்துக்கள் அதிகரிக்கும்
• அரசியல்வாதிகளுக்கு பெரும் பயம் உண்டாகும். ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
• கிழக்கு திசையில் உள்ள நாடுகள் பாதிக்கப்படும். பிரபலமான பெண் ஒருவரின் இழப்பு ஏற்படும்.
• தானியங்கள் உற்பத்தி பெருகும் என்று விளம்பி வருடத்திய திருமலை திருப்பதி தேவாஸ்தான பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
அரசு கண்காணிப்பு
இந்த ஆண்டு மகர சங்கராந்தி புருஷர் அசுவினி நட்சத்திரத்தில் வருவதால் வங்கிகளில் தன நாசம் ஏற்படும். லாக்கரில் உள்ள முக்கிய பொருட்கள் யாவும் அரசின் கண்காணிப்பில் வரும். யாரும் அரசாங்கத்தை இனி ஏமாற்ற முடியாமல் தவிப்பார்கள் என்று ஆற்காடு கா.வெ. சீதாராமய்யர் சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
27 நட்சத்திரகாரர்களுக்குப் பலன்கள்:
ரேவதி, அசுவினி, பரணி ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தன நாசமும், கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம் ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தன லாபமும் உண்டாகும். ஆயில்யம், மகம், பூரம் ஆகிய 3 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான நாசமும் ஏற்படும்.
ராஜ வெகுமானம்
உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஸ்தான லாபமும்,கேட்டை, மூலம், பூராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ கோபமும், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 6 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ வெகுமானமும் மகர சங்கராந்தி பலன்களாக ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications