அப்துல் கலாம் நினைவு தினம்: கிருஷ்ணகிரி ஜோதிநகர் அரசு பள்ளி மாணவர்கள் மலரஞ்சலி
கிருஷ்ணகிரி: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அப்துல் கலாமின் திரு உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி காலமானார். அவரது உடல் ராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
27.07.2016 புதன்கிழமையன்று ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களது முதலாம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் கடைப்பிடிக்கபட்டது.

மாணவர்கள் அஞ்சலி
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளும் மவுன ஊர்வலம், மலரஞ்சலி செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஜோதிநகர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

கலாமின் நற்பண்புகள்
தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் அப்துல் கலாம் அவர்களின் பல்வேறு பண்பு நலன்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் மீது அவர் கொண்ட ஈடுபாடு ஆகியவற்றை விளக்கி, அவரின் கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பு நம்மிடம் உள்ளது எனக் கூறினார்.

மாணவர்கள் மலரஞ்சலி
அலங்கரிக்கப்பட்ட கலாம் அவர்கள் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய மாணவர்களும், ஆசிரியர்களும் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

பள்ளியில் நினைவு நாள்
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். உதவி ஆசிரியர்கள் திருமதி ந. திலகா, த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications