கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. மேலும் 2 பேர் கைது.. சயான், மனோஜை பிடிக்க தீவிரம்
உதகை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த தீபு, பிஜின்குட்டி ஆகியோரை நீலகிரி போலீசார் கைது செய்தனர். ஜாமீன் ரத்து செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் நுழைந்தது. அங்கு காவலில் இருந்த ஓம்பகதூரை கொலை செய்து விட்டு, பங்களாவுக்கு நுழைந்து சில ஆவணங்களை எடுத்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். மற்ற 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த மாதம் டெல்லியில் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் முன்னிலையில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து, கொடநாடு வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக கூறினர்.
இதையடுத்து, அவர்களை தமிழக போலீசார் டெல்லியில் கைது செய்தனர். சென்னை அழைத்து வரப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இதனையடுத்து இருவருக்கும் ஜாமீனை ரத்து செய்வதாகவும், உடனடியாக காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. மேலும், சயான், வளையார் மனோஜ், திபு, பிஜின் ஆகியோருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த தீபு, பிஜின்குட்டி ஆகியோரை நீலகிரி போலீசார் கைது செய்தனர். சயான், வளையார் மனோஜ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications