சின்ன தம்பியை பாதுகாக்க இதை செய்யுங்க... பீட்டா அமைப்பு யோசனை
சென்னை: காட்டு யானைகள் மற்றும் மனிதர்கள் இடையிலான பிரச்னையை சமாளிக்க வழிமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலருக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
வனங்களை அழித்து மனிதன் தனக்கு வேண்டிய வகையில் அங்கு வீடுகளை கட்டி, வனங்களை ஆக்கிரமித்துக் கொண்டான். அதன் விளைவாய் மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் மோதல் ஏற்படுவது இயல்பாகிவிட்டது.
குறிப்பாக, காட்டு யானைகளின் வழித்தடங்கள் அழிக்கப்பட்டதால் அவை ஊருக்குள் வருவதும், அச்சுறுத்துபவர்களை தாக்குவதையும் வழக்கமாக வைத்துள்ளன. இந்த மோதல்களை முடிவுக்கு கொண்டுவர வனவிலங்குகளுக்கே அதிக நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

சின்னதம்பி யானை
உதாரணமாக, கோவை தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்ன தம்பி என்ற காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டி
அடிக்க முயன்ற வனத்துறையினர், அந்த யானையை ஜேசிபியை கொண்டு மோசமாக சுற்றிவளைத்து டாப்சிலீப் அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். ஆனால் சின்ன தம்பி யானை 100 கிலோ மீட்டர் மேல் கடந்து வந்து உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் முகாமிட்டுள்ளது. யானை வழித்தடங்கள் அழிக்கப்பட்டதால், குடும்ப உறுப்பினர்களை தேடி சின்ன தம்பி காட்டுயானை அலைந்து வருகிறது.

வனவிலங்கு ஆர்வலர்கள்
இந்நிலையில், விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும், சின்ன தம்பியை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரம் இதுவரை யாரையும் தாக்காத சின்னத் தம்பியை கும்கியாக மாற்றி மனிதர்களின் அருகிலேயே வைத்தால் அது உயிருடன் இருக்கும் என்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.

சமாளிக்க வழிமுறை
இதற்கிடையே, சின்னதம்பி யானையின் நடமாட்டம் குறித்து வரும் 11-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னதம்பி யானை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் பீட்டா அமைப்பு காட்டு யானைகள் மற்றும் மனிதர்கள் இடையிலான பிரச்னையை சமாளிக்க வழிமுறைகளை வகுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது

பீட்டா கடிதம்
தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலருக்கு பீட்டா அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் மேற்கண்ட தகவலை கூறியுள்ளது. மேலும் யானைகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாய நிலங்களை சுற்றி மிளகாய் சாகுபடி செய்ய வேண்டும். மேலும் சின்ன தம்பி மற்றும் பிற யானைகளின் இயற்கை வாழ்விடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பீட்டா அமைப்பு அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications