மாஸ்க் இல்லை.. உணவு இல்லை.. சீனாவில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்
பெய்ஜிங்: சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மாஸ்க்குகளும் உணவு பொருட்களும் தீர்ந்துவிட்டதால் அதை வாங்குவதற்கு கூட வெளியேற முடியாமல் தமிழக மாணவர்கள் தவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கரோனா வைரஸ் நோயால் 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் வூஹான் நகர்ப்பகுதி மீன் சந்தையிலிருந்து கரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என தெரிகிறது.

கரோனா வைரஸ்
இதனால் அந்த நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் ஸ்தம்பித்துள்ளது. மேலும் 10 நகரங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. காற்றில் பரவும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க பல்வேறு மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.

சீனா
வெளியே செல்லும் போது முகமூடி அணிந்து செல்கின்றனர். கூடுதலாக உணவு பொருட்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இதனால் சீனாவில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகம், கேரளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மாணவர்கள் சீனாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர்.

சீனா
இவர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பது குறித்து பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சீனாவில் தற்போது பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. சீனாவில் பயின்று வரும் தமிழக மாணவர்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழக மாணவர்கள்
அடுத்த 2 நாட்களுக்கு மட்டுமே உணவு தயார் செய்வதற்கு தேவையான பொருட்கள் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். கரோனா வைரஸ் காற்றில் பரவுவதால் நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க முகமூடி அணிவது அவசியமாகிறது. ஆனால் அதை வாங்குவதற்கு கூட இந்த மாணவர்களால் வெளியே செல்ல முடியவில்லை.

உதவி
இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக மாணவர்களை தொடர்பு கொண்டு நோய் தொற்று குறித்து கேட்டறிந்தனர். அவர்களது தொடர்பு எண்களையும் மாணவர்களிடம் கொடுத்து உதவி தேவைப்படுமாயின் அழைக்குமாறு அறிவுறுத்தினர். உணவு, முகமூடி இல்லாததால் இ்ந்திய தூதரகத்தின் உதவியை மாணவர்கள் நாடியுள்ளனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications