வருமானத்திற்கே வழியில்லையாம்... வரியை குறைதென்ன பயன்... வேல்முருகன் விமர்சனம்
சென்னை: விலையேற்றம், வேலையின்மை, பணவீக்கம், பணப்புழக்கமின்மை ஆகியவற்றால் தேசமே தேய்ந்துவரும் நிலையில், பசப்பு வார்த்தைகளால் மத்திய அரசு அதனை மூடிமறைக்க முயற்சிப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

எப்படி நம்புவது?
இந்தியாவில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த 5 இடங்களில் உலகத் தரத்தில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்; இந்த 5 இடங்களில் தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் இடம்பெறும் என்கிறது பட்ஜெட். நாம் கேட்கிறோம். திருநெல்வேலி - திருவைகுண்டம் வழியில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களையெல்லாம் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றீர்களே, எங்கே அவை? இந்தக் கேள்விக்கு இதுவரை பதில் இல்லாததால், உண்மையான பொருளை அருங்காட்சியகத்தில் வைப்பீர்கள் என்று எப்படி நம்புவது?

சிதைக்கும் வேலை
கீழடியில் உலகிலேயே தொன்மையான பொருள்கள் கிடைத்ததும் அகழாய்வையே ஊத்தி மூடியவர்கள்தானே? இப்போது தமிழ்நாடு தொல்லியல் துறை அல்லவா கீழடி அகழாய்வை மேற்கொண்டிருக்கிறது! எங்கள் எம்பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் அதைப் பொருட்படுத்தாது ‘சிந்துவெளி நாகரிகம்' என்பதை ‘சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம்' என்று மீண்டும் மீண்டும் பட்ஜெட்டில் குறிப்பிட்டதென்ன? இப்படி வரலாற்றைத் திரிக்கும், சிதைக்கும் வேலை ஏன்? வர்ணாசிரம மனுஅதர்மம் தவிர, உருப்படியான எந்தக் கொள்கையும் இல்லாத வெற்றுவேட்டுதானே

என்ன பயன்?
‘வருமான வரிக் குறைப்பு' என்கிறது பட்ஜெட்! வருமானத்திற்கே வழி இல்லாதபோது வரியைக் குறைத்தென்ன, கூட்டியென்ன? புதிய வேலைவாய்ப்பிற்குத் திட்டமில்லை; இருக்கிற வேலையை இழப்பதையும் தடுக்க முடியவில்லை. மக்கள் தங்கள் பணத்தை சேமிப்பதற்கு கொடுக்கப்பட்டு வந்த சலுகைகளும் நீக்கப்பட்டுள்ளதால், நாட்டில் சமூகப் பாதுகாப்பே கேள்விக்குறி ஆகியிருப்பதுதான் உண்மை.

பொதுத்துறை
பொதுத்துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாக விற்றுக் கொண்டிருக்கிறது பாஜக அரசு. இப்போது நாட்டின் முதன்மையான, அதிமுக்கியமான பொதுத்துறை நிறுவனத்தையே விற்கப்போகிறது. இத்தனைக்கும் ஏற்கனவே எல்ஐசியிடமிருந்து சுமார் 20 லட்சம் கோடி அளவுக்கு கடன் பெற்றிருக்கிறது பாஜக அரசு. இப்போது விற்கப்போகிறது என்றால் அதன் கதையையே முடிக்கப்போகிறது என்பதைத் தவிர வேறென்ன பொருள்?

மறைக்க முயற்சி
விலையேற்றம், வேலையின்மை, பணவீக்கம், பணப்புழக்கமின்மை ஆகிய இவற்றால் தேசமே தேய்ந்துவரும் நிலையில், பசப்பு வார்த்தைகளால் பவ்வியமாக அதனை மூடிமறைக்கப் பார்க்கிறது மத்திய பட்ஜெட்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications