வனப் பகுதிக்குள் வைத்து கொரோனா நோயாளிகள் சடலங்கள் எரிப்பு.. ஜார்கண்ட் அரசு விளக்கம்
ராஞ்சி: கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் சடலங்களை வனப்பகுதிக்குள் வைத்து எரித்ததாகவும், அதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் இந்தியா டுடேசேனல் ஒளிபரப்பிய செய்திக்கு ஜார்கண்ட் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில், ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போயுள்ளது.

இந்த நிலையில்தான், அல்மோரா என்ற மாவட்டத்தில் வனப்பகுதிக்குள் வைத்து கொரோனாவால் உயிரிழந்த சடலங்கள் எரியூட்டப்பட்டதாக இந்தியா டுடே சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் அங்கு அதிகாரிகள் யாரும் இல்லை, வழிகாட்டுதல்கள் கிடையாது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜார்கண்ட் மாநில சுகாதாரத்துறை ட்விட்டர் பதிவில் விளக்கமளித்துள்ளது. கொரோனா நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிப்பதற்காக இந்த வனப்பகுதி பயன்படுத்தப்படுகிறது. கவச உடைகள் அணிந்த அரசு ஊழியர்கள் சடலங்களை எரிப்பதில், ஈடுபட்டனர்.
உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து இந்தியா டுடே ஊடகம் பதிலளித்து வெளியிட்டுள்ள செய்தியில், மே 20ம் தேதி அல்மோரா மாவட்டத்தின் மலைப்பகுதியில் சடலங்கள் எரிக்கப்படுவதாக கிடைத்த தகவல் பெயரில் அங்கு வீடியோ எடுக்கப்பட்டதாகவும், அங்கே வசிக்க கூடிய மக்கள் வைரஸ் பரவல் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
தங்களது பத்திரிக்கையாளர்கள் குழு அந்த இடத்துக்கு சென்றபோது சடலங்கள் எரிக்கப்பட்டு கொண்டு இருந்ததாகவும், அங்கு அரசு சார்பில் அதிகாரிகள் யாரும் இல்லை, மேலாண்மை செய்வதற்கு வழிகாட்டுவதற்கு யாரும் கிடையாது என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.
மேலும் எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை செய்தியாளர் குழு அங்கு இருந்தது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மாலை 4.30 மணிவரை சடலங்களை எரித்து முடிக்கும்வரை அங்கேயே இருந்ததாகவும் அதுவரை எந்த ஒரு அரசு ஊழியரும் வந்து மேற்பார்வை செய்யவில்லை என்றும் அந்த ஊடகம் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அல்மோரா மாவட்ட கலெக்டர் நித்தின் சிங் மற்றும் எம்எல்ஏ ரேகா ஆரியா ஆகியோரை தொடர்பு கொள்வதற்கு தொலைபேசியில் மற்றும் மெசேஜ் மூலமாக முயற்சி செய்த போதிலும் கூட அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை என்று இந்தியா டுடே விளக்கமளித்துள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications