கணவருடன் சண்டை.. கடும் விரக்தி.. விபரீத முடிவு.. தாய்-5 மகள்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
ராய்ப்பூர்: குடும்ப தகராறு காரணமாக சத்தீஸ்கரை சேர்ந்த பெண், தனது 5 மகள்களுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுண்ட் மாவட்டம் பெம்ச்சா கிராமத்தைச் சேர்ந்தவர் உமா சாஹு (45). இவருக்கு திருமணமாகி அன்னபூர்ணா (18), யசோதா (16), பூமிகா (14), கும்கம் (12), மற்றும் துளசி (10) ஆகிய 5 மகள்கள் உள்ளனர்.

குடும்ப தகராறு
உமா சாஹுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு எற்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் தினமும் சண்டை போடுவது வழக்கமாகி விட்டது. இந்த நிலையில் நேற்று இரவும் கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் உமா சாஹு கடும் விரகதியில் மூழ்கினார்.

விபரீத முடிவு
''வயசுக்கு வந்த பெண்களை வைத்துக் கொண்டு தினமும் இப்படி சண்டை போட்டு இருக்கிறது நல்லாவா இருக்கிறது'' என்று அவரது மனம் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தது. இதனால் விபரீத முடிவு எடுக்க திட்டமிட்டார் உமா சாஹு. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு தனது 5 மகள்களையும் அழைத்து வீட்டை விட்டு வெளியே சென்றார்.

ரயில் முன் பாய்ந்து தற்கொலை
மகாசமுண்ட் மற்றும் பெல்சொண்டா ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாள பகுதிக்கு மகள்களை கூட்டி சென்ற உமா சாஹு, ''நம்மால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இனி இருந்து என்ன செய்ய போகிறோம்'' என்று மகள்களிடம் கூறினார். இதனை தொடர்ந்து உமா சாஹு மற்றும் அவரது மகள்கள் 5 பேரும் சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

சோகத்தில் மூழ்கிய கிராமம்
ரயில் மோதிய வேகத்தில் அவர்களது 5 பேரின் உடல்களும் அப்பகுதியில் சிதறின. இது குறித்து தகவல் அறிந்ததும் மகாசமுண்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தாய் மற்றும் 5 மகள்களின் உடல்களை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக பெண் 5 மகள்களுடன் உயிரை மாய்த்துக் கொண்டது பெம்ச்சா கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications