'கொச்சு கொச்சு சந்தோஷங்கள்'... தொழிலதிபர் ரவி பிள்ளை மகள் திருமணத்திற்கு பாகுபலி பேலஸ் செட்!
கேரளா: கேரள மாநிலத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர் ரவி பிள்ளையின் மகள் திருமணத்திற்காக கொல்லம் நகரின் மைய பகுதியில் உள்ள 8 ஏக்கர் நிலத்தில் பாகுபாலி அரண்மனையைப் போல பிரமாண்ட செட் உருவாக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவி பிள்ளையின் மகள் டாக்டர். ஆர்த்திக்கும், கொச்சியைச் சேர்ந்த டாக்டர். ஆதித்யா விஷ்ணுவுக்கும் இன்று திருமணம் நடைபெறுகிறது. இதற்காக 'பாகுபலி' அரண்மனையைப் போல 8 ஏக்கரில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை 'பாகுபலி' படத்தின் கலை இயக்குனர் சாபு சிரில்தான் (இவரும் கேரளாவைச் சேர்ந்தவர்தான்) நிர்மானித்துள்ளார். இந்த செட்தான் இப்போது கேரளாவின் டாக் ஆப் தி ஸ்டேட் ஆக மாறியுள்ளது.

ராஜஸ்தான் அரண்மனை போல
இது குறித்து சாபு சிரில் கூறுகையில், 5 ஏக்கரில் அமைக்கப்பட்ட 'பாகுபலி' படத்தின் அரண்மனையை உருவாக்க இரண்டரை ஆண்டுகள் ஆனது. ஆனால் இங்கு 8 ஏக்கரில் 3 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பில் ராஜஸ்தான் அரண்மனை வடிவில் இந்த செட் உருவாக்கப்பட்டுள்ளது.

30,000 பேர் உட்காரலாம்
ஒரே நேரத்தில் 30 ஆயிரம் விருந்தினர்கள் அமரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பந்தலையும், அரண்மனையையும் உருவாக்க ரூ.20 கோடி செலவானது. 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து இதனை உருவாக்கியுள்ளனர் என்றார்.

ரூ. 10 கோடி நன்கொடையாம்
தொழில் அதிபர் ரவி பிள்ளையின் மகள் திருமணத்தையொட்டி திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் உள்ள அறக்கட்டளைகளுக்கு ரூ.10 கோடி வரை நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எம்புட்டு பேரு வர்றாங்க பாருங்க
திருமணத்தில் ஐக்கிய அரபு எமிரேட்டின் இந்திய தூதர், பக்ரைன் ராஜ குடும்ப பிரதிநிதி கத்தார் நாட்டின் அரச குடும்பத்தினர், சவுதி அரேபியா நாட்டின் மன்னர் குடும்பத்தினர், லெபனான் நாட்டின் தூதர் உள்ளிட்ட 42 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

சினிமா நட்சத்திரங்களும்
இவர்களை தவிர பாலிவுட், ஹாலிவுட் மற்றும் கேரள திரையுலக நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், மத்திய மந்திரிகள், தொழில் அதிபர்களும் மணமக்களை வாழ்த்த நேரில் வருகிறார்கள்.

செலவு மட்டும் ரூ. 55 கோடியாம்
இவர்களுக்காக தனி விமானங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் உள்நாட்டு உணவு வகைகளும் திருமண விருந்தில் இடம் பெறுகிறது. திருமண செலவு மட்டும் ரூ.55 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.

26க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
வெளிநாடு வாழ் இந்தியரான ரவி பிள்ளை வளைகுடா நாட்டிலும், கிழக்கு ஆசிய நாடுகளிலும் கட்டுமானம், கனிம மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். 26-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவரது நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இங்கு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள். ரவி பிள்ளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை அளித்தபோது அழைப்பிதழுடன் விலை உயர்ந்த பட்டுச்சேலை, பட்டு வேட்டி, அங்க வஸ்திரம் ஆகியவற்றையும் வழங்கியுள்ளார்.

"அச்சன்" மனசுக்கேற்ப வாழ்ந்தா சரி!
இவ்வளவு செலவு செய்து கல்யாணம் செய்கிறார் ரவி பிள்ளை. தந்தைக்கு மகிழ்ச்சி தரும் மகள் வாழ்ந்து காட்டினால் சரித்தான்.
-
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications