கோவை ஏர்போர்ட்டில் பரபரப்பு.. 22 ரக "துருப்பிடித்த" கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட காங்கிரஸ் பிரமுகர்
சென்னை: கோயமுத்தூர் விமான நிலையத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியைப் பிடித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் கே.எஸ்.பி.ஏ.தாங்கல். இவர் பட்டாம்பி நகராட்சி முன்னாள் தலைவராகவும் இருந்தார்.

இன்று காலை தாங்கல், கோயமுத்தூரில் இருந்து பெங்களூர் வழியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய இருந்தார். இன்று காலை 6 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு தாங்கல் வந்தபோது, தாங்கலின் உடைமைகள் பரிசோதனை செய்யப்பட்டது.
சோதனையில் தாங்கல் கொண்டு வந்த பையில் துப்பாக்கி ஒன்றும் , ஏழு தோட்டாக்களும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தக் கைத்துப்பாக்கி துருப்பிடித்த நிலையில் பயன்படுத்தமுடியாதபடி இருந்ததாகத் தெரியவந்துள்ளது. தாங்கல் வைத்திருந்த துப்பாக்கி 22 ரக கைத்துப்பாக்கி என தெரியவந்துள்ளது. மேலும் துப்பாக்கியோடு 7 புல்லட்டுகளும் அதோடு இருந்துள்ளது. துப்பாக்கிக்கு உரிய அனுமதி இல்லாத நிலையில் பீளமேடு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயண அவசரத்தில் கைத் துப்பாக்கியைத் தெரியாமல் எடுத்துவந்ததாக தாங்கல் தெரிவித்திருக்கிறார்.

முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில் தாங்கலிடம் பீளமேடு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாங்கல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. பட்டாம்பு நகராட்சி முன்னாள் தலைவரான தாங்கல் செயல்பட்டிருக்கிறார். மேலும் இவர் பட்டாம்பியில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், அரசியல் ரீதியாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படுமா என்பது அடுத்தக்கட்ட விசாரணையில்தான் தெரியவரும்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துசெல்வர். விமான நிலையத்தில் ஒருவர் காலை வேளையில் கைத்துப்பாக்கியுடன் வந்ததும் விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications