நான் முழுமை அல்ல... ஆனால் நான் நானாக இருக்கிறேன்!
முழுமை.. அதாவது Perfection.. அப்படின்னா என்னா.. நிறையப் பேருக்கு அதில ஒரு தெளிவு இருப்பதில்லை. சரியாக புரிவதும் இல்லை.
ஒவ்வொருவரின் பார்வையிலும் முழுமைக்கு ஒரு அர்த்தம் உண்டு. இப்படி இருந்தால் முழுமை என்று சிலர் சில விஷயங்களை நினைக்கலாம்.
சிலருடைய பார்வையில் வேறு சில விஷயங்கள் இருந்தால் அதை முழுமை என்று அவர்கள் சொல்லலாம் என்று கூறுவார்கள். இப்படி ஒவ்வொருவரின் பார்வையிலும் முழுமை வேறு படுகிறது, மாறுபடுகிறது.

எது முழுமை
வாழ்க்கையில் யாருமே முழுமையாக இருக்க முடியாது. எல்லாமே சரி என்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆங்காங்கே சில சில குறைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் எப்படி இருந்தாலும், எதுவாக இருந்தாலும் நீங்கள் நீங்களாக இருக்க முயற்சியுங்கள்.. அதுதான் உண்மையான வெற்றி. நம்முடைய இயல்பு என்பது எதுவோ அதுதான் கடைசி வரை நமது அடையாளமாக இருக்க முடியும்.

குறைகள் இல்லாத மனிதன் இல்லை
குறைகள் இல்லாத மனிதனே இருக்க முடியாது. குறைகள் இல்லாவிட்டால் மனிதனாகவும் இருக்க முடியாது. யாரிடம் தான் குறை இல்லை. ஆனால் குறைகளைக் களைய நாம் முயல வேண்டும். எல்லாமே சரியாக இருக்காது. நாம் தான் அதை சரியாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நாம் நம் வாழ்வில் வெற்றி அடைய முடியும். நம்மிடம் உள்ள திறமைகளைக் கொண்டு நம் முயற்சியால் நாம் வெற்றி பெற முடியும்.

யாருக்காகவும் மாறத் தேவையில்லை
யாருக்காகவும் நாம் மாறக் கூடாது. மாறத் தேவையும் இல்லை, அவசியமும் இல்லை. அது இயல்பான விஷயமாகவும் இருக்க முடியாது. செயற்கையாகவே அது இருக்கும். கடைசி வரை நீங்கள் நீங்களாகவே இருங்கள். உங்கள் தனித்துவத்தின் மூலம் வெற்றி வாகை சூடுங்கள். உங்கள் செயல்களில் உங்களுக்குத் தெரிந்தவற்றை செய்யுங்கள். பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். தவறுகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் எல்லாமே தனித் தனி
வாழ்க்கையில் எல்லோருமே தனிப்பட்ட உயிர்கள்தான். யாரும் யாரையும் சார்ந்திருக்கவில்லை. யாரும் யாரையும் நம்பி இருக்கவில்லை. தன் கையே தனக்கு உதவி. கடவுள் படைத்த படைப்பில் உருவான நாம் இவ்வுலகை விட்டு நீங்கும் வரை நீங்கள் நீங்களாகவே இருங்கள். யாருக்காகவும் உங்களுக்குப் பிடித்தமானவற்றை விட்டுக் கொடுக்காதீர்கள். இருப்பது ஒரு வாழ்க்கை அதில் உங்களுக்குப் பிடித்தது போல வாழுங்கள்.

மற்றவர்களுக்காக மாறாதீர்கள்
நீங்கள் எப்போதும் நீங்களாகவே இருங்கள். உங்களுக்கென்று சில நேரம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தை உங்களுக்குப் பிடித்தாற் போல செலவிடுங்கள். அது உங்களது நேரம்.. உங்களுக்கானது மட்டுமான நேரம். அதில் உங்களைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது. பிறருக்காக நாம் நம்மை மாற்றிக் கொண்டே போனால் ஒரு கட்டத்தில் நாம் யார் நம்முடைய தனித்துவம் என்ன என்பதே மறந்து விடும். உங்களுடைய விருப்பத்திற்கேற்றார் போல இருங்கள்.

நிறைகளையும் பாருங்கள்
குறைகள் இல்லாத மனிதர்களே இல்லை. குறையை மட்டும் பிறரிடம் கூறாமல் சில நிறைகளையும் கூறுங்கள். யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும் ஆனால் உங்கள் செயலில் மட்டுமே உங்கள் கவனம் இருக்கட்டும். பிறர் குறை கூறுவதை எண்ணி வருந்தாதீர்கள். அதற்காக நீங்கள் உங்களை மாற்றிக் கொண்டால் வாழ்நாள் முழுவதும் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டி இருக்கும். நீங்கள் எப்போதும் நீங்களாக இருங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications