ஹரித்துவாரில் மீண்டும் திருவள்ளூவர் சிலை திறப்பு !
தமிழ் அமைப்புகளின் முயற்சியால் ஹரித்துவாரில் மீண்டும் திருவள்ளூவர் சிலை நேற்று மாலை நிறுவப்பட்டது.
ஹரித்துவார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மீண்டும் திருவள்ளூவர் சிலை நேற்று மாலை நிறுவப்பட்டது. முதல்வர் ஹரீஷ்ராவத் சிலையை திறந்து வைத்தார்
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் முயற்சி செய்தார். இதற்காக தமிழகத்தின் நாமக்கல்லில் திருவள்ளுவர் உருவச் சிலை வடிவமைக்கப்பட்டது. ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலைக்கு கொல்லிமலை அடிவாரத்தில் 10.50 டன் எடையில் கல் எடுக்கப்பட்டு. 20 சிற்பக் கலைஞர்கள் தொடர்ந்து 35 நாள்கள் பணியாற்றி சிலையை உருவாக்கினர்.

இதையடுத்து தமிழகத்தில் இருந்து திருவள்ளுவர் சிலை கடந்த ஜூன் மாதம் ரயில் மூலம் ஹரித்துவார் கொண்டு செல்லப்பட்டு நிறுவப்பட்டது. ஆனால், சாதுக்களின் கடும் எதிர்ப்பால், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது. ஆனால், தற்போது அங்குள்ள பூங்கா ஒன்றில் கறுப்பு நிற கவரால் சுற்றி, கட்டப்பட்ட நிலையில், கேட்பாரற்று கிடந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள், இதை திருவள்ளுவருக்கு நேர்ந்த அவமானமாக கருதி கண்டித்து குரல் எழுப்பின. இதையடுத்து சிலையை மீண்டும் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு உதவி செய்வதாக உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஹரீஷ் ராவத், தமிழ் அமைப்புகளிடம் உறுதியளித்தார்.
இதன்படி, ஹரித்துவாரில் உள்ள மேளா பவன் வளாகத்தில் நேற்று மாலை திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் ஹரீஷ் ராவத் சிலையை திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஏராளமான தமிழ் அமைப்பினர் பங்கேற்றனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications