பள்ளியின் அலட்சியத்தால் பாழான 24 பிளஸ் டூ மாணவர்கள்
சென்னை:
சென்னையில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் 24 மாணவ, மாணவியர் பிளஸ் டூ தேர்வு முடியவில் லை.
சென்னை அயனாவரத்தில் உள்ளது கிறிஸ்து ராஜா மேல்நிலைப் பள்ளி. இங்கு 10-ம் வகுப்பு வரை மட்டு மே கல்வித் துறையால் அங்கீகாரம்கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை மீறி பிளஸ் டூ வகுப்புக்கும் கடந்த 1997ம் ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.
கல்வித் துறையை ஏமாற்றி, வேறு பள்ளிகள் மூலம் இங்கு பிளஸ்டூ தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இந்தஆண்டுக்கும் 24 மாணவ, மாணவியர் பிளஸ் டூ வகுப்பில் சேர்க்கப்பட்டு படித்து வந்தனர். தேர்வுக்காக தலா ரூ. 250 கட்டணும் கட்டியிருந்தனர். இந்தநிலையில், பிளஸ் டூ தேர்வுகள் திங்கள்கிழமை முதல் துவங்கின.
ஆனால் இந்த 24 மாணவர்களுக்கும் தேர்வு எழுத ஹால் டிக் கெட் வழங்கப்படவில் லை. எழுத்துத் தேர்வுக்கு முன்பாக நடக்கும் செய்மு றைத் தேர்வுதங்களுக்கு நடத்தப்படாததால், பள்ளித் தாளாளரை அணுகி கேட்டனர் மாணவ, மாணவியர். அதற்கு, எழுத்துத் தேர்வுக்குப் பிறகும் கூட செய்முறைத்தேர்வு எழுத முடியும் என்று தாளாளர் ராஜ் மோகன் கூறியுள்ளார். அதை மாணவ, மாணவியரும் நம்பினர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை முதல் துவங்கிய எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக் கெட் வந்து சேராததால், மாணவ, மாணவியருக்குச் சந்தேகம்வலுத்தது. இதையடுத்து சைதாப்பேட் டையில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தை அணுகி விசாரித்தனர்.
பெற்றோரும் அவர்களுடன் சென்றனர். அப்போதுதான், கிறிஸ்து ராஜா பள்ளிக்கு பிளஸ் டூ வகுப்புக்கான அங்கீகாரமே வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை மாணவர்கள் உணர்ந்தனர்.
எதிர்காலமே இருண்ட நிலையில், மாணவ, மாணவியர் அனைவரும் முதல்வர் கருணாநிதி, கல்வி அமைச்சர் அன்பழகன் ஆகியோரை நேரில் சந்தித்து மனுகொடுத்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் அறி வொளியிடம் மனு கொடுத்தனர். ஆனால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கல்வித்துறைஅதிகாரிகள் கை விரித்து விட்டனர்.
அழுத கண்களோடு, துயரத் தோடும், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திங்கள்கிழமை குவிந்த மாணவ, மாணவியர் தாங்கள் எழுத அனுமதிக்கப்படவேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலரிடம் கெஞ்சினர். ஆனால் தங்களால் எதுவு மே செய்யஇயலாது என்று அதிகாரிகள் கூறி விட்டனர்.
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தங்களின் எதிர்காலம் பாழாகி விட்ட துயரத் தோடு மாணவ, மாணவியர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.
இந்த சம்பவம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் அறி வொளி கூறு கையில், இந்த விஷயத்தில் தவறு பள்ளி நிர்வாகத்தின் மீதுதான். அவர்கள் மீதுமுறையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவியர்களுக்கு எங்களால் உதவ இயலாது.
சில தனியார் பள்ளிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு இம்மாதிரி நடந்து கொள்கின்றன. பெற்றோர்களும், மாணவர்களும்தான் மிகவும் ஜாக்கிர தையுடன்நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
இதில் வேடிக்கை என்ன வென்றால், பள்ளித் தாளாளர் ராஜ் மோகனின் மகள் பியூலாவும் இதே பள்ளியில்தான் பிளஸ் டூ படித்து வந்தார்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல்












Click it and Unblock the Notifications