இன்று காட்டுக்குள் நுழைகிறது அதிரடிப்படை
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடி, வேட்டையைத் துவக்கும் அதிரடிப்படை வியாழக்கிழமை காட்டிற்குள்நுழைகிறது.
இதுவரை முகாம்களில் இருந்த அதிரடிப்படை அவ்வப்போது, வீரப்பனைத் தேடி அடிக்கடி காட்டுக்குள் சென்றுவந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் முழுமையான வீரப்பன் வேட்டையை முழுவீச்சில் ஆரம்பிப்பதற்காகவியாழக்கிழமை காட்டிற்குள் நுழைகிறது.
இதையொட்டி, வேட்டை நடக்கும் காட்டுப் பகுதியில் ஆடு, மாடு மேய்க்கவும், விறகு வெட்டச் செல்லவும்பொதுமக்களுக்கு அதிரடிப்படையினர் தடை விதித்துள்ளனர்.
காட்டுக்குள் வீரப்பனைத் தேடும் பணி தொடங்கியுள்ளதால், தாளவாடி, பண்ணாரி, அந்தியூர் உட்பட பல்வேறுகாட்டுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் காட்டுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள்ஆடு, மாடு மேய்க்கவோ, விறகு எடுக்கவோ தேடுதல் வேட்டை நடக்கும் வனப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்என அதிரடிப்படையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், வீரப்பனுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.தாளவாடி அருகே உள்ள கோழிப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மளிகைக் கடையில் அரிசிஉட்பட பல்வேறு உணவுப் பொருட்களை வீரப்பனுக்காக எடுத்துச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை உளவுப் பிரிவு போலீசார் பிடித்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.எனவே, வீரப்பன் குறிப்பிட்ட காட்டுப் பகுதியில் இருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் அதிரடிப்படையினர்களம் இறங்குகின்றனர்.
சுமார் 200 போலீசார் முதல் கட்டத் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இவர்களது பணி தொடர்ந்துநடைபெறும்போது, அடுத்த பிரிவு போலீசாரும் ஈடுபடுவர்.
தேடுதல் பணியை ஒட்டி, வீரப்பன், பிணைக் கைதியாக வேறு யாரையாவது கடத்திச் செல்லக் கூடும் என்ற சூழ்நிலைநிலவுவதால், வனப் பகுதியோரம் உள்ள இடங்களில், கமாண்டோ படைகள் அடங்கிய பிரிவு சிறப்புப் பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் காடுகளின் எல்லையோர கிராமங்களில் கண்காணிப்பு பணியையும்மேற்கொண்டு வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications