For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் 10 மணி நேரத்தில் தயாரான ரயில்வே சுரங்கப் பாதை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை-திருவொற்றியூரில், ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைத்து, 10 மணி நேரத்தில் ரயில்வே சுரங்கப்பாதைஅமைக்கப்பட்டு, அது மக்கள் போக்குவரத்துக்கும் திறக்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே சண்முகம் நகர் மற்றும் அம்பேத்கர் நகருக்கு இடையே ரயில்வே பாதைஉள்ளது. இரு பகுதிகளையும் சேர்ந்தவர்கள் மறு பகுதிக்குச் செல்ல வேண்டுமானால் ரயில்வே பாதையைக்கடந்தால்தான் முடியும்.

இப்பாதையில் ரயில் போக்குவரத்து அதிகம் இருப்பதால் சுரங்கப் பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனஇப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, கடந்த தி.மு.க ஆட்சியில் சுரங்கப் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. தி.மு.க. எம்.பியானகுப்புசாமி தனது எம்.பி. தொகுதி நிதியிலிருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்தார். ரயில்வே ரூ.15 லட்சத்தைஒதுக்கியது.

இதன் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைத்து விட்டு காலையில் பணிகளைஆரம்பித்து மாலையில் முடித்து விட முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குப் பணிகள் ஆரம்பித்தன. 500 ஊழியர்கள் இதில் ஈடுபட்டனர். 5புல்டோசர்கள், 4 கிரேன்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மாலை 5 மணிக்குள் திட்டமிட்டபடி சுரங்கப்பாதைஅமைக்கும் பணிகள் முடிந்தன.

இந்திய ரயில்வே வரலாற்றில், 10 மணி நேரத்திலேயே முடிக்கப்பட்ட முதல் சுரங்கப்பாதை இதுதான் என்றசாதனையை இந்தச் சுரங்கப்பாதை பெற்றுள்ளது.

பணிகளை எம்.பி. குப்புசாமி, தொண்டர் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. சிவாஜி,ரயில்வே அதிகாரிகள் நேரில் பார்த்தனர். பொதுமக்களும் ஏராளமான அளவில் கூடியிருந்து வேடிக்கைபார்த்தனர்.

பணிகள் முடிந்த கையோடு, இந்தச் சுரங்கப்பாதை பொதுமக்கள் பயன்படுத்துவதற்காகத் திறந்து வைக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X