முதல்வரின் இலாகா மாறுமா?
சென்னை:
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வசம் உள்ள காவல்துறை மூத்த அமைச்சர் ஒருவருக்குமாற்றப்படலாம் என்று தெரிகிறது.
தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் வெள்ளிக்கிழமை இரவுபதவியேற்றார்.
அவருடன் 24 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, ஆளுநர் பதவிப்பிரமானம் செய்து வைத்ததுசெல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்ததால் முதல்வர் பதவியிலிருந்துஜெயலலிதா அகற்றப்பட்டார்.
புதிய முதல்வராகியுள்ள ஓ.பன்னீர் செல்வம் நியமனத்தால் சில மூத்த அமைச்சர்கள்அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தங்களை விட அனுபவத்தில், வயதில் குறைந்த ஓ.பன்னீர் செல்வத்தின் கீழ் பணிபுரியஅவர்கள் தயங்குவதாக தெரிகிறது.
அரசியலில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத, தங்களுக்குக் கீழ் இருந்து வந்தஓ.பன்னீர் செல்வத்திற்குக் கீழ் பணிபுரிய அவர்கள் பெரிதும் தயங்குவதாகக்கூறப்படுகிறது.
இதேபோன்ற எண்ணம் அதிகாரிகள் மத்தியிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தம்பித்துரை, பொன்னையன் போன்றவர்கள் தங்களது அதிருப்தியை தைரியத்துடன்ஜெயலலிதாவிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. அவர்களது கருத்தை ஆமோதித்தஜெயலலிதா சற்று பொருத்திருங்கள், இது நிரந்தரமானதல்ல.
விரைவில் உங்களுக்கு சந்தோஷமான வகையில் செயல்பாடுகள் இருக்கும் என்றாராம்.
இந்த நிலையில் முதல்வர் பன்னீர் செல்வத்திடம் இருக்கும் சில முக்கிய துறைகள்விரைவில் மூத்த அமைச்சர்கள் சிலருக்கு மாற்றப்படக் கூடும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக போலீஸ் துறையை மிகவும் கவனமாக கையாள வேண்டும். தற்போது டிஜிபிரவீந்திரநாத் சஸ்பெண்ட் செய்து வைக்கப்பட்டுள்ளார். கருணாநிதி கைது தொடர்பாகவிசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நேரத்தில் போலீஸ் துறை, திறமையான ஒருவரிடம் இருப்பதுதான் நல்லது என்றுஜெயலலிதாவுக்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
பன்னீர்செல்வத்தால் திறம்பட போலீஸ் துறையை பார்த்துக் கொள்ள முடியுமா என்றசந்தேகம் ஜெயலலிதாவுக்கு எழுந்துள்ளது.
எனவே போலீஸ் துறையை அவரிடமிருந்து வேறு ஒரு மூத்த அமைச்சரிடம் கொடுக்கஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அனேகமாக பொன்னையன் அல்லதுதம்பித்துரையிடம் அந்தத் துறை கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தற்போதைக்கு இந்த மாற்றங்கள் இருக்காது எனவும் கூறப்படுகிறது. முதல்வர்பதவியிலிருந்து அகன்று விட்டாலும் கூட அரசின் செயல்பாடுகளில்ஜெயலலிதாதலையிடுவதாக பேச்சு வந்து விடும் என்பதால் சிறிது நாட்கள் கழித்து இந்தமாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications