ஏவுகணை தளத்தில் தவறி வெடித்த குண்டு: 3 பேர் பலி
பலசூர்:
ஒரிசாவில் உள்ள ஏவுகணைத் தளத்தில் ஷெல் குண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஒரிசா மாநிலம் சந்திப்பூர் அருகே பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்துக்கு (டி.ஆர்.டி.ஓ.) சொந்தமான ஒரு சோதனைமையம் உள்ளது. பீரங்கி மற்றும் ஷெல் குண்டுகள் ஆகியவை இங்கு பரிசோதிக்கப்படுவது வழக்கம். ஏவுகணைச்சோதனைகளும் இங்கு தான் நடைபெறும்.
ஷெல் குண்டுகள் கடலை நோக்கிச் சுடப்பட்டு சோதிக்கப்படுவது வழக்கம். அப்படிச் சுடப்பட்டு வெடித்த பலகுண்டுகளின் எஞ்சிய பகுதிகள் கரையொதுங்கும்.
அவ்வாறு ஒதுங்கிய ஷெல் குண்டுகளை நொறுக்கி அதிலிருந்த வெண்கலக் கம்பிகளை அப்பகுதி மக்கள்பிரித்தெடுத்து விற்று விடுவது வழக்கம்.
இந்நிலையில் ஒரு ஷெல் குண்டு இந்த மையத்திலிருந்து சுடப்பட்டது. ஆனால் கடலுக்குள் சென்று விழுந்த அந்தக்குண்டு வெடிக்கவில்லை. அந்த மையத்தில் இருந்தவர்களும் வெடிக்காத அந்த குண்டைக் கண்டு கொள்ளவில்லை.
அவ்வாறு வெடிக்காத அந்தக் குண்டு நேற்று கரையொதுங்கியது. இதையடுத்து அந்த ஷெல் குண்டை சிலர் எடுத்தபோது அது திடீரென்று பலத்த சத்தத்துடன் வெடித்தது.
இதில் மூன்று பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். அப்பகுதியில் நின்று கொண்டிருந்தஏராளமானவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஆனாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.
குண்டு வெடித்த இடத்தில் பொதுமக்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications