32,000 பஸ் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு: அரசு பகிரங்க அறிவிப்பு
சென்னை:
போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்குவதால் 32,000 போக்குவரத்து ஊழியர்கள் பணியிழக்க நேரிடும்என்று உறுதியாகத் தெரிய வந்துள்ளது. உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோடா இதை குறிப்பிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
பத்திரிகைச் செய்திகள், சில அரசியல் தலைவர்கள் கூறுவது போல 60,000 பேர் வேலை இழக்க மாட்டார்கள்.சுமார் 32,000 பேர் மட்டுமே வேலை இழப்பார்கள். அவர்களுக்கும் கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வுத் திட்டம்அமல்படுத்தப்படும், எனவே போக்குவரத்து ஊழியர்கள் பயப்படத் தேவையில்லை.
நஷ்டம் தரக் கூடியதாக கணிக்கப்பட்டுள்ள 16,000 பஸ் ரூட்களில் 4,000 ரூட்கள் ஏற்கனவே தனியாரிடம்உள்ளது. அதில் மேலும் 4,000 ரூட்கள் தனியாருக்கு வழங்கப்படும்.
டென்டர் முறையில் ரகசியமோ ஒளிவுமறைவோ இருக்காது. அதிக தொகை வழங்கும் நிறுவனத்திற்கே பஸ் ரூட்வழங்கப்படும். ஏதாவது ஒரு பஸ் ரூட்டை வாங்குவதற்கு யாரும் முன்வராவிட்டால் அந்த ரூட்டை அரசாங்கமேதொடர்ந்து இயக்கி வரும்.
தனியார்மயமாக்கலால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ளப்படும். மாணவர்களுக்கானஇலவச பஸ் பாஸ் திட்டம் தனியார் மயமாக்கலுக்குப் பிறகு தனியார் பஸ்களிலும் தொடரும்.
இதை ஒரு நிபந்தனையாக டெண்டரில் குறிப்பிட உள்ளோம். அதனால் தனியார் பஸ் நிறுவனங்களுக்கு ஏற்படும்நஷ்டத்தை அரசு ஈடு கட்டும்.
தனியார்மயாகும் பஸ் ரூட்களை அடையாளம் காணுவது, பொதுமக்களிடம் கருத்து கேட்பது உள்ளிட்ட பணிகள்ஜனவரி மாதம் வரை நடைபெறும். அதன் பிறகு டெண்டர் விடுவது உள்ளிட்ட பணிகள் துவங்கும் என்றார் முனீர்ஹோடா.
-->
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications