கருணாநிதிக்கு உமறுப் புலவர் விருது
சென்னை: முதல்வர் கருணாநிதியின் வாழ்நாள் இலக்கிய சாதனைக்காக இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் உமறுப் புலவர் விருது வழங்கப்படவுள்ளது.
இஸ்லாமிய இலக்கிய கழக இயக்குநர் கவிஞர் அப்துல் ரகுமான், தலைவர் அமீர் அலி, பொதுச் செயலாளர் இதாயத்துல்லா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் 7வது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுகிறது.
மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகளை நிதியமைச்சர் அன்பழகன் தொடங்கி வைக்கிறார். அமீர் அலி தலைமை தாங்குகிறார். ஆளுநர் பர்னாலா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
விழாவில் முதல்வர் கருணாநிதிக்கு வாழ்நாள் இலக்கிய சாதனைக்காகவும், இஸ்லாமிய சமுதாயத்திற்கு காட்டும் ஆதரவுக்காகவும் ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் கூடிய உமறுப்புலவர் விருதை மாநிலங்களவை துணைத் தலைவர் ரகுமான்கான் வழங்கிறார்.
மத்திய அமைச்சர் வாசன் தமிழறிஞர்களுக்கு பொற்கிழி வழங்குகிறார். மாநாட்டு மலரை இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமீர் அலி ஆகியோர் வெளியிட எம்.பி ஜே.எம்.ஹாரூண் பெற்றுக் கொள்கிறார்.
தவத்திரு குன்றகுடி அடிகளார் தலைமையில், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறும். இந்த மாநாட்டை இதயங்கள் இணைப்புக்கு இலக்கியம் என்ற தலைப்பில் நடத்துகிறோம்.
இந்த மாநாட்டில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கோற்கின்றனர். 300 ஆய்வுக் கட்டுரைகளும், 35 புத்தகங்களும் வெளியிடப்படுகின்றன. அதில் 10 அரிய நூல்களாகும்.
பல நூற்றாண்டுகளாக தமிழ் அறிஞர்கள் இயற்றிய இஸ்லாமிய இலக்கியங்களை இலவசமாக புத்தகவடிவில் புதுப்பித்து கொடுக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
குறைந்த பட்சம் 5 பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளை ஏற்படுத்தி அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 தன்னாட்சி கல்லூரிகளில் இஸ்லாமிய இலக்கியத்துறைகளை ஏற்படுத்தி ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்குவது, அவர்கள் தங்கி படிப்பதற்கு இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி பண்பாட்டு மையம் ஏற்படுத்தவும், நூலகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications