செங்கோட்டை: விநாயகர் சிலை ஊர்வலத்தில் போலீஸ்-இந்து முன்னணி மோதல்
செங்கோட்டை:
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது இந்து முன்னணி அமைப்பினருக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் மூண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 22 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று மதியம் ஒரு மணி அளவில் வண்டி மறிச்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஓம் காளி திடலில் பக்த கோஷங்கள் முழங்க, கேரள செண்டை மேளம், வாணவேடிக்கை, ஆடல் பாடலுடன் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். ஊர்வலம் வலலம் ரோடு, செல்வ விநாயகர் கோவில் தெரு, மேலூர், பள்ளிவாசல் தெரு, காசுக்கடை பஜார் வழியாக சென்றது.
மேலூர் பள்ளிவாசல் அருகே சென்றபோது போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் சில நிமிடங்களில் நிலைமை கட்டுக்குள் வந்தது.
இதே போல் தபால் நிலையம் அருகிலும் போலீசாருக்கும் பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் தங்களை போலீசார் தாக்கியதாக புகார் தெரிவித்தனர்.
தென்காசியில் ..
தென்காசியில் இந்த ஆண்டு நடந்த மோதல்கள் காரணமாக பல இடங்களில் விநாயகர் சிலை வைக்க போலீசார் அனுமதிக்கவில்லை.
காசிவிஸ்வநாதர் ஆலயம் முன்பு மட்டும் அலங்கரிக்கப்பட்ட நிலையில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் நேற்று மாலையில் விநாயகர் சிலையை விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
ஊர்வலத்தை இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் துவக்கி வைத்து ரத வீதிகள் முழுவதும் விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக வந்தார்.
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கிராமம் தைக்கா முக்கில் அமைந்துள்ள ஸ்ரீஅதிர்ஷ்ட விநாயகர் கோவில் முன்பு அமைந்துள்ள ஸ்ரீஅதிர்ஷ்ட விநாயகர் சிலைக்கு ரூ.500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் 61 நோட்டுகள் ரூபாய் 30 ஆயிரத்தி 500 மாலையாக அணிவிக்கப்பட்டடது.
டிஎஸ்பி மீது பாஜக புகார்:
கடந்த 16ம் தேதி செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது டிஎஸ்பி மயில்வாகணனுடன் வந்த சிறப்பு படை போலீசார் தாக்கியதாகவும், வழக்கு போடுவதாக கூறி மிரட்டி வருவதாகவும் முன்னாள் பாஜக நகர தலைவர் வர்மா எஸ்.தங்கராஜ், விநாயகர் சதுர்த்தி குழு தலைவர் இசக்கிமுத்து ஆகிய இரண்டு பேரும் டிஎஸ்பி மீதும் அவருடன் வந்த காவலர் மீதும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications