சென்னை வந்த ரயில் ஒரிசாவில் தடம் புரண்டது - 15 பேர் பலி

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேற்று பிற்பகலில் ஹௌராவிலிருந்து புறப்பட்டது. இன்று மாலை அது சென்னைக்கு வரவிருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு 7.50 மணிக்கு ஒரிசா தலைநகர் புவனேஸ்வரிலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள ஜாஜ்பூர் ரோடு ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டது.
ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்து விழுந்தன.
சரக்கு வைக்கும் மற்றும் தூங்கும் வசதி கொண்ட ஒரு பெட்டி, முன்பதிவு வசதி அல்லாத 2 பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் ஆகியவை தடம் புரண்டன.
இதில் 4 பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி நசுங்கி விட்டன. குளுகுளு வசதி கொண்ட பெட்டிகள், பின்பகுதியில் இருந்ததால் அவை கவிழாமல் தப்பின. என்ஜின் அருகே இருந்த பெட்டிகள்தன் பெரும் சேதத்தை சந்தித்தன.
இந்த கோர விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர். 200 பேர் படுகாயமடைந்தனர்.
ஒரிசா பேரிடர் விரைவு அதிரடிப்படையினரும், மருத்துவ குழுவினரும் விபத்து பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நடுவழியில் சிக்கி தவித்த பயணிகளை அழைத்துச் செல்வதற்காக, சிறப்பு நிவாரண ரெயில்களும் விபத்து பகுதிக்கு விரைந்து சென்றன.
போலீசாரும், உள்ளூர் மக்களும் வெறும் கையால் உடல்களையும், காயம் அடைந்தவர்களையும் மீட்க முயன்றனர். ஆனால், நசுங்கிய பெட்டிகளுக்குள் கிடந்த உடல்களை மீட்பது சிரமமாக இருந்ததால், ரெயில்வே அதிகாரிகள், கேஸ் கட்டர்'களை வரவழைத்து பெட்டிகளை வெட்டி எடுத்து உடல்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டனர்.
இரவு நேரமாக இருந்ததால் மீட்புப் பணி பெரும் பாதிப்பை சந்தித்தது.
தகவல் அறிய ..
விபத்தில் சிக்கியவர்கள், உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குறித்த தகவல் அறிய 0674-2303728, 2303714, 2534694 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளளாம் என கிழக்குக் கடற்கரை ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையிலும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. தகவல் அறிய விரும்புவோர் 044-25024545, 25024548 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
ரூ. 5 லட்சம் நிவாரணம் ..
விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலையை அவர் அறிவித்துள்ளார்.
ரயில்வே இணை அமைச்சர் வேலு, ரயில்வே வாரிய தலைவர் ஆகியோரை சம்பவ இடத்திற்கும் அவர் அனுப்பி வைத்தார்.
விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
விபத்து காரணமாக, இன்று இரவு 11.35 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை-ஹௌரா மெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
-
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள்












Click it and Unblock the Notifications