திருப்பதி தொகுதியில் சிரஞ்சீவி போட்டி

ராஜமுந்திரியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் சிரஞ்சீவி பேசுகையில்,
சட்டமன்ற தேர்தலில் திருப்பதி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக இருந்தால், எனது சொந்த ஊரான நரசாபுரத்திலும் போட்டியிடுவேன்.
புது முகங்கள் மற்றும் பெண் வேட்பாளர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்கப்படும். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் நூறு பேர் பிரஜா ராஜ்ஜியம் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்கள்.
காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் இருவரும் உயர்சாதிக்காரர்கள்.
தெலுங்குதேசம் நடத்திய 9 ஆண்டு கால ஆட்சி மற்றும் காங்கிரசின் 5 ஆண்டு ஆட்சி என ஆந்திர மக்களுக்கு 14 ஆண்டு வனவாசம் முடிந்துவிட்டது. இவர்களால் ஏழை மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. அவர்களின் சமுக மதிப்பும் உயரவில்லை.
பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு அனைத்து மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆந்திராவில் மெளன புரட்சி நடக்கிறது. வரும் தேர்தலில் பிரஜா ராஜ்ஜியம் அமோக வெற்றிபெறும்.
சந்திரபாபு நாயுடு படு துணிச்சலாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு ஊழல் செய்தார். தற்போது ராஜசேகர ரெட்டியோ அதை விட பல மடங்கு ஊழல் செய்துள்ளார். இந்த ஊழல் தலைவர்களுக்கு மக்களைப் பற்றியோ, சட்டத்தைப் பற்றியோ துளியும் பயமி்ல்லை.
பிரஜா ராஜ்ஜியம் ஆட்சிக்கு வந்தால் ராஜசேகர ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மீது ஊழல் வழக்குகள் தொடரப்படும். பின்னர் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வரை வழக்கை தொடர்ந்து நடத்துவோம்.
இரு தலைவர்களின் குடும்பங்களிடம் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து ஏழை, எளிய மக்களுக்கு பகிர்ந்து அளிப்போம். அவர்கள் குடும்பத்தினர் சேர்த்த சொத்துக்களுக்கு உரிய கணக்கு கேட்போம்.
எனவே ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்க பிரஜா ராஜ்ஜியம் கட்சியை ஆதரியுங்கள் என்றார் சிரஞ்சீவி.
கூட்டணி சிக்கலில் நாயுடு...:
மூன்றாவது அணியில் இணைந்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.
ஆந்திராவில் 294 சட்டமன்ற மற்றும் 42 எம்.பி தொகுதிகளும் உள்ளன. இதில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி 45 சட்டசபை தொகுதிகளையும், 10 எம்பி தொகுதிகளையும் கேட்கிறது.
இதில் ஒன்று குறைந்தால் கூட கூட்டணியை விட்டு விலகிவிடுவோம் என்று எச்சரித்துள்ளது.
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 2 எம்.பி. தொகுதி மற்றும் 20 சட்டசபை தொகுதிகளைக் கேட்டு அடம்பிடித்து வருகின்றன.
இதனால் பெரும் குழப்பத்தில் உள்ள சந்திரபாபு நாயுடு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தள்ளிப்போட்டு வருகிறார்.
-
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications