டெல்லியை உலுக்கிய கன மழை-ஸ்தம்பித்த நகரம்
டெல்லி: நேற்று பிற்பகல் முதல் இரவு வரை வெளுத்துக் கட்டிய கன மழையால் தலைநகர் டெல்லி ஸ்தம்பித்துப் போனது. சாலைகள் அனைத்தும் நீரில் மிதந்தன.
டெல்லியில் பருவ மழை மிகத் தாமதமாக வந்துள்ளது. நேற்று திடீரென பிற்பகலுக்கு மேல் கன மழை பெய்யத் தொடங்கியது. இரவு 9 மணி வரை விடாமல் பெய்த பேய் மழையால் டெல்லி ஸ்தம்பித்துப் போனது.
நகரின் அனைத்துச் சாலைகளிலும் தண்ணீர் வெள்ளமென ஓடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
பல இடங்களில் சாலைகள் பெயர்ந்து போய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த பருவ மழைக் காலத்தி்ல் இதுதான் மிகப் பெரிய மழை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு வரை 69 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
ஜூன் 1ம் தேதி முதல் பெய்த மழையில் 56 சதவீதம் நேற்று ஒரே நாளில் பெய்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன மழை காரணமாக போதிய வெளிச்சம் இல்லாததால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. இதனால் விமானங்கள் தாமதமாகின.
சாலைகளில் வெள்ளம் என மழை நீர் ஓடியதால் வாகனதாரிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள்தான் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகினர்.
அனைத்து முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது.
தொடர் மழை காரணமாக நபாஜ்கர் சாலையில், ரஜோரி கார்டன் பின்புறம் உள்ள முக்கியச் சாலை பெரும் பள்ளமாகி விட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
சுப்ரமணிய பாரதி மார்க் பகுதியில், இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடியதால் வாகனங்களை ஓட்ட முடியவில்லை.
நேற்று நள்ளிரவைத் தாண்டியும் கூட போக்குவரத்து நெரிசல் பல சாலைகளில் சீராகாமல் இருந்தது.
நொய்டாவில் 11 பேர் பலி:
டெல்லியைச் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் பேய் மழை பெய்து தீர்த்தது. இதில், நொய்டா 58வது செக்டார் பகுதியில் நேற்று இரவு ஒரு வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் இன்று காலை இறந்தார்.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications