பன்றி காய்ச்சல் புனேவில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது ஏன்?

பன்றி காய்ச்சல் நோய் காரணமாக இந்தியாவில் மற்ற நகரங்களை விட புனே தான் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாட்டில் இதுவரை பலியான 23 பேரில் 15 பேர் புனே நகரை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரியது. அதாவது பலியானவர்களில் சுமார் 65 சதவீதம் பேர் இந்த நகரை சேர்ந்தவர்கள்.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், புனேவில் உள்ள சில பகுதிகளில் வசிக்கும் மக்களை ஹெச்1என்1 வைரஸ் ஒட்டுமொத்தமாக தாக்கியுள்ளது. ஆனால், அவர்களில் யாரும் சமீபத்தில் வெளிநாடுகளுக்கு செல்லவில்லை என்றார்.
இதையடுத்து பன்றி காய்ச்சல் புனேவில் மட்டும் ஏன் இவ்வளவு அதிக உயிர்களை பலி வாங்கியுள்ளது, அதிகம் பரவுவது ஏன், அங்குள்ள அதிகாரிகள் நோய் தடுப்புக்கு என்ன செய்தார்கள் போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்து வருகின்றன.
இந்த கேள்விகளுக்கு சில பதில்கள் கிடைத்துள்ளது. முதலாவதாக, அங்குள்ள மக்கள் ஆரம்பத்தில் போதிய விழிப்புணர்ச்சி இல்லாமல் பன்றி காய்ச்சல் நோயாளிகளிடம் நெருங்கி பழகியுள்ளனர். இதனால் இந்த நோய் வேகமாக பரவியுள்ளது.
இரண்டாவது, மாநில அரசு இந்த நோய் தாக்குதலை தடுக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கண்கெட்ட பின் சூரியனை வணங்குவது போல், நோய் தொற்றி பல நாட்களுக்கு பின்னர் தான் நோய் தடுப்புக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை செய்துள்ளது.
அடுத்ததாக, இங்குள்ள வானிலை ஹெச்1என்1 வைரஸ் வேகமாக பரவுவதற்கு ஏற்றதாக இருப்பதாக கூறப்படுகிறது.
புனேவில் இந்த நோயின் தாக்கம் குறித்து தேசிய தொற்று நோய் கழக விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், ஆரம்பக்கட்டத்தில் மாநில அரசு போதிய நடவடிக்கை எடுக்க தவறியதால் வேகமாக பரவியுள்ளது என்றார்.
சென்னை பெண்ணுக்கு ஸ்வைன் இல்லை...
வாரனாசியில் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சென்னை பெண்மணிக்கு பன்றி காய்ச்சல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 11ம் தேதி சென்னையை சேர்ந்த பிரேமலதா என்ற பெண்மணி பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் வாரனாசியில் உள்ள எஸ்பிஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
தற்போது பரிசோதனை முடிவில் அவருக்கு பன்றி காய்ச்சல் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல் தான் தெரிகிறது.
இது குறித்து அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஆர்எஸ் வர்மா கூறுகையில், லக்னெள ஆய்வுகூடம் அவருக்கு பன்றி காய்ச்சல் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது. இருந்தாலும் அவர் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட மாட்டார். அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என்றார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications