கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரே மாதத்தில் 1100 பேருக்கு ஆபரேஷன்
சென்னை: தமிழக அரசு அறிமுகப்படுத்திய கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரே மாதத்தில் 1100 பேருக்கு உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏழை, எளிய விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தனியார் மருத்துவமனையில் உயிர்காக்கும் உயர் சிகிச்சை அளிக்கும் கலைஞர் காப்பீட்டு திட்டம் கடந்த 23-7-2009 அன்று தொடங்கப்பட்டது.
இருதய ஆபரேஷன், சிறுநீரக மாற்று ஆபரேஷன், நுரையீரல், எலும்பு முறிவு, பக்கவாதம், பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நோய்களுக்கு இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர்சிகிச்சை பெறலாம்.
இதற்கான மருத்துவ செலவை அரசு ஏற்கிறது. இந்த மருத்துவ காப்பீட்டு பணியை ஸ்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்துகிறது. ஒரு கோடி பேருக்கு இந்த இலவச காப்பீட்டு திட்டம் அரசால் அளிக்கப்படுகிறது.
மக்களிடையே இந்தத் திட்டம் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இத்திட்டம் கிராமப்புற மக்களை பெருமளவில் சென்றைய வேண்டும் என்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடங்கி ஒரு மாதம் முடிந்துள்ளது. இந்த ஒரு மாதத்தில் 1100 பேருக்கு இத்திட்டம் மூலம் பலன் கிடைத்துல்ளதாக திட்ட அதிகாரி விஜயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
ஏழை-எளிய மக்கள் சிகிச்சை பெற முடியாமல் உயிர் இழக்கக்கூடிய நிலை இருந்ததை முதல்-அமைச்சர் கருணாநிதி மாற்றி உயிர் காக்கும் உயர்ந்த சிகிச்சையை இலவசமாக அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இதுவரை 1100 பேர் இலவசமாக பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்து உடல் நலத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
இருதயம், சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் செய்து பயன் அடைந்துள்ளனர். இதற்காக ரூ. 5.3 கோடி மருத்துவ செலவை அரசு வழங்கியுள்ளது.
இத்திட்டத்தில் பயன் அடைய கூடியவர்களுக்கு மருத்துவ அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதுவரை புகைப்படம் எடுத்துக் கொண்டவர்களுக்கு அவர்களது கையெழுத்துடன் கூடிய புகைப்படம் அடங்கிய அடையாள அட்டை இன்னும் 10 நாளில் வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது என்றார் அவர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications