சென்னையில் இலங்கை தூதரகம் தேவையில்லை-சீமான்
சென்னை: தமிழர்களை பற்றி தவறாக பேசிய இலங்கை துணை தூதரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் இலங்கை துணைத் தூதரகமே தேவையில்லை. தமிழினத்துக்கான ஒரு தூதரகம் தான் இங்கு இருக்க வேண்டும் என இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சீமானின் தலைமையில் செயல்பட்டு வரும் நாம் தமிழர் இயக்கம் சார்பில் ஆழ்வார்பேட்டை இலங்கை துணைத் தூதரக அலுவலகத்தின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் சீமான் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் தமிழர்களை கொச்சைப்படுத்திய பேசிய இலங்கை துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். சிலர் ராஜபக்சேவின் உருவபடத்தை செருப்பால் அடித்தனர்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் பேனர், புலி கொடி ஆகியவற்றை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தின்போது சீமான் பேசுகையில்,
ஈழத் தமிழர்களை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுமா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு இலங்கை துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அது மிருகக் காட்சி சாலை அல்ல என்று வாய்க்கொழுப்புடன் பதிலளித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குவதாக வெளியான செய்திகள் தவறானது எனவும் கூறுகிறார். தமிழ்நாட்டுக்கே வந்து தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக, இழிவுபடுத்தி பேசும் அவரை இங்கு பணியாற்ற அனுமதிக்கக்கூடாது.
ஈழத்தமிழ் மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை தாங்க முடியாமல் வேதனை அடைந்து வரும் இந்த நேரத்தில் பொறுப்பு வாய்ந்த பதவியில் உள்ள அதிகாரி ஒருவர் இப்படி பேசியிருப்பதால் வேதனைக்கு ஆளாகியிருக்கிறோம்.
மாநிலம் தழுவிய போராட்டம்...
அவரை உடனடியாக மத்திய அரசும், தமிழக அரசும் வெளியேற்ற வேண்டும். தமிழ்நாட்டுக்கு இலங்கை துணை தூதரகமே தேவையில்லை. தமிழினத்துக்கான ஒரு தூதரகம்தான் இங்கே அமைய வேண்டும்.
வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் தமிழின உணர்வாளர்களை ஒன்றுதிரட்டி மிக பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றார் சீமான்.
-
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications